districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

சேலம், மார்ச் 3- வெயிலில் இருந்து தப்பிக்க ஏற்காட்டில் ஞாயிறன்று சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின்  தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் ஞாயிறன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணி கள் திரண்டனர். ஏற்காட்டில் பகல் நேரங்களில் வெயில்  சற்று அதிகமாக காணப்பட்டாலும், காற்றில் ஈரப்பதம்  அதிகமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் இல்லாமல்  சில்லென்று காற்று வீசி வருகிறது. இதை அனுபவிக்க  வந்த சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிலுள்ள முக்கிய  சுற்றுலா இடங்களான ரோஜா தோட்டம், சேர்வராயன் குகை கோவில், தாவரவியல் பூங்கா, ஐந்தினை பூங்கா  போன்ற இடங்களை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.

கிணற்றில் விழந்த புள்ளிமான் மீட்பு

சேலம், மார்ச் 3- சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே வளையமா தேவி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். வனப்பகுதி அருகே உள்ள இவரது விவசாய தோட்டத்தில் 60 அடி  ஆழமுள்ள கிணற்றில், வனப்பகுதியில் இருந்து தண் ணீர் தேடி வந்த இரண்டரை வயது புள்ளிமான் தவறி விழுந்துள்ளது. இதையறிந்த விவசாயி முருகேசன் ஆத் தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித் தார். விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான மீட்பு படையினர் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் மானை உயிருடன் மீட்ட னர். இதன்பின் புள்ளிமானை வனத்துறையிடம் ஒப்ப டைக்கப்பட்டு, காப்புக்காட்டில் மான் விடுவிக்கப்பட் டது. கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில், வனப் பகுதியில் போதிய தண்ணீர் இல்லாமல் வனவிலங்கு கள் விவசாய நில பகுதியில் தண்ணீர், இரைத்தேடி வருவதால் வனத்துறையினர் வனப்பகுதியிலேயே வன விலங்குகளுக்கு போதிய தண்ணீர் ஏற்பாடு செய்ய  வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

விவசாய நிலத்தில் திடீர் தீ விபத்து

சேலம், மார்ச் 3- சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கருமந்துறை  வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள ஏரிவளவு கிரா மத்தில் விவசாய நிலங்கள் உள்ளன. தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில். வனப்பகுதி மற்றும் விவ சாய நிலப்பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க வனத் துறையினர் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி  வருகின்றனர். இந்நிலையில், ஞாயிறன்று கருமந்துறை வனப்பகுதி அருகே ஏரிவளவு பகுதியில் திடீரென விவ சாய நிலத்திலிருந்த காய்ந்த செடிகள் மற்றும் முட்புதர் களில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதியை புகை மூட்டம் சூழ்ந்தது. இதையடுத்து அவ் வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள், மரக் கிளைகளை உடைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், வனத்துறையினருக்கும், தீய ணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். காற் றின் வேகம் அதிகமானதால் தீ கட்டுக்கடங்காமல் பரவி, தீ விவசாய நிலப்பகுதி முழுவதும் பரவியது. இதனால்  அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

பழங்குடியின மக்களுக்கான மாரத்தான் போட்டி

கோவை, மார்ச் 3- கோவையில் முதல் முறையாக பழங்குடி யின மக்களை மீட்டெடுக்கும் முயற்சியாக நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.  கோவை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத் தின் பல்வேறு பகுதிகளில் பழங்குடியின மக் கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந் நிலையில் பழங்குடியின மக்கள் எதிர்கொள் ளும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அவர்களிடம் உள்ள பொருளாதார மாற்றங் களை கொண்டு வர வேண்டும் என்பதை மையமாக வைத்து, கோவில்பாளையம் பகுதியில் ‘ரன் ஃபார் நேட்டிவ் ட்ரைப்ஸ்’ எனும் பெயரில் பழங்குடியின மக்களை மீட் டெடுக்கும் முயற்சியாக மாரத்தான் போட்டி நடைபெற்றது. கோவையில் உள்ள கேசிடி வணிக பள்ளியின் சார்பில் பழங்குடியின மக்களுக்கென முதல் முறையாக நடத்தப் பட்ட இப்போட்டியில், தமிழக முழுவதும் இருந்து பழங்குடியினர் மற்றும் தன்னார் வலர்கள், குழந்தைகள் என 600க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். இதில் வரக்கூடிய வருவாயை பழங்குடியின குழந்தைகளின் கல்வி, பெண்களுக்கான பிரச்சனைகள் தீர்க்கப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் கள் தெரிவித்தனர்.

இயற்பியல் மாணவர்களுக்கான கருத்தரங்கம்

நாமக்கல், மார்ச் 3- அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி யில் “இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள இயற்பியல் அறிவியல் மாணவர்க ளுக்கான ஆராய்ச்சி வாய்ப்புகள்” என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் “இந் தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள இயற் பியல் அறிவியல் மாணவர்களுக்கான ஆராய்ச்சி வாய்ப்புகள்” என்ற தலைப்பில் சனியன்று இணையவழி கருத்தரங்கம் நடை பெற்றது. இந்நிகழ்வுக்கு கல்லூரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். இயற்பியல் துறைத் தலைவர் சின்னுசாமி வரவேற்றார். இக்கருத் தரங்கில் தைவான் நாட்டின் மிங்ஷி தொழில் நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்  பெருமாள் மற்றும் சேலம் பெரியார் பல்கலைக் கழக இயற்பியல் துறை ஆராய்ச்சி மாணவர் பாலாஜி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இயற்பியல் துறையில் இந் தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள மேற் படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான வாய்ப்பு களை பற்றி விரிவாக எடுத்துரைத்தனர். இக் கருத்தரங்கில் ஏராளமான மாணவ, மாணவி யர்கள் இணையவழியில் பங்கேற்றனர். இறு தியில் இயற்பியல் துறை பேராசிரியர் சேது பதி நன்றி கூறினார்.

கட்டி தரம் குறித்து கோட்ட பொறியாளர் ஆய்வு

கோபி, மார்ச் 3- தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டத் தின் கீழ், கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புக ளின் தரம் குறித்து, கோட்டப் பொறியாளர் ஆய்வு மேற் கொண்டார்.  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே  உள்ள கவுந்தபாடி பெரியார் நகர், உடையாகவுண்டம்பா ளையம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட  மேம்பாட்டு வாரிய திட்டத்தின் கீழ் வீடு கட்ட நிதி ஒதுக்கப் பட்டது. அதன்படி, 1056 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும்  பணிகள், கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகி றது. தற்போது, அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான பணிகள், இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோட்டப் பொறியாளர் சரவணக்குமார் கட்டுமா னப் பணிகளை பார்வையிட்டார். அப்போது அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறி வுரை வழங்கினார்.

அதிமுக ஜாதி கட்சியாக மாறி வருகிறது

அதிமுக ஜாதி கட்சியாக மாறி வருகிறது நாமக்கல் ,மார்ச். 3- தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதி முக கட்சி, சாதி கட்சியாக மாறியுள்ளது என திமுக நாமக் கல் மேற்கு மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே அதி முக உள்ளிட்ட மாற்று கட்சியில் இருந்து விலகிய பொதுமக் கள் சிலர், திமுகவில் இணைந்தனர். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திமுக  ஒன்றியச் செயலாளர் வட்டூர் தங்கவேல் தலைமை வகித் தார். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா  செந்தில் தலைமையில், பலர் தங்களை திமுகவில் இணைத் துக் கொண்டனர்.  இதனை தொடர்ந்து மதுரா செந்தில் கூறுகையில், தற் போது அதிமுக ஜெயலலிதா, எம்ஜிஆர் காலத்தில் இருந் தது போல் இல்லாமல், சாதி கட்சியாக மாறி உள்ளது என  சாடினார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் காலத் தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு பணிகளை வழங்கி  உள்ளார். தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினும் பட்டியலின  மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் என்றார்.

சாலை பாதுக்காப்பு விழிப்புணர்வு பேரணி

நாமக்கல், மார்ச் 3-  பொத்தனூரில் சாலை பாதுகாப்பு குறித்த  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூரில் சாலை பாது காப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி சனி யன்று நடைபெற்றது. இந்நிகழ்வை பரமத்தி  வேலூர் காவல் துறை உட்கோட்டம், பர மத்தி வேலூர் வட்டாரப் போக்குவரத்துத் துறை மற்றும் பொத்தனூர் பிருந்தாவன் பள்ளி என இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தி னர்.  பிருந்தாவன் பள்ளியின் முன்பு தொடங்கி  இப்பேரணியை, பரமத்தி வேலூர் வட்டாரப்  போக்குவரத்து ஆய்வாளர் சரவணன், பொத் தனூர் பேரூராட்சித் தலைவர் கருணாநிதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, இப்பேரணியனது பொத்தனூ ரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று  மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந் ந்தது.  அப்போது, போக்குவரத்து விதிமுறை கள் குறித்த முழக்கங்களை எழுப்பியும், துண் டுப் பிரசுரங்களை வழங்கியும் பொதுமக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் போக்குவரத்து காவல் துறை உதவி  ஆய்வாளர் ஆனந்தன், காவல் உதவி ஆய் வாளர் குமார் உள்ளிட்ட ஏரானமானோர் கலந்து கொண்டனர்.

ரூ. 2.25 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

நாமக்கல், மார்ச் 3-  திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளை யில், சனியன்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில், சுற் றுப்புற பகுதியில் இருந்து 65 மூட்டை கொப்பரையை கொண்டு வந்தனர். மேலும், முதல் ரகம் கிலோ ரூபாய். 72.80  முதல் ரூபாய். 83.10 வரையிலும், இரண்டாம் ரகம் ரூபாய்.  60.25 முதல் ரூபாய். 70.10 வரையிலும் ஏலம் நடைபெற் றது. மொத்தம் ரூபாய். 2.25 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்ற தாகவும், அடுத்த ஏலம் வரும் 8 ஆம் தேதியன்று நடைபெ றும் என்றும் சங்க மேலாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை கூட்டம்

ஈரோடு, மார்ச் 3- தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து  காட்டு யானைகள் தக்காளி மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தியது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலி கள் காப்பகத்தை சுற்றி ஏராளமான வனவி லங்குகள் வசித்து வருகின்றன. அவ்வப் போது கரடி, சிறுத்தை, யானை ஆகிய வனவி லங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி  விவசாய தோட்டத்திற்குள் புகுவது வழக் கம்.  இந்நிலையில், தாளவாடி வனச்சரகத் திக்கு உட்பட்ட மெட்டல்வாடி பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்த  மூன்று காட்டு யானைகள், பயிரிடப்பட்டி ருந்த தக்காளி, வாழை ஆகியவற்றை சேதம்  செய்தது. இதை கண்ட தோட்ட உரிமையா ளர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் யானை களை விரட்டினர். சுமார் 3 மணிநேர போராட் டத்திற்கு பிறகு யானைகளை வனப்பகுதி குள் விரட்டினர். யானை புகுந்ததால் அரை  ஏக்கர் தக்காளி, 200 வாழை மரங்கள் சேதம்  அடைந்தன.  அடிக்கடி யானைகள் வருவதை தடுக்க வனத்துறையினர் ரோந்து பணி யில் ஈடுபட வேண்டும் எனவும், சேதமடைந்த  பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண் டும் எனவும் அப்பகுதி விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோடை சீசனுக்கு முன்பாகவே பூத்த லில்லி செடிகள்

உதகை, மார்ச் 3- தாவரவியல் பூங்காவில் கோடை சீச னுக்கு முன்பாகவே லில்லி செடியில், பல் வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்துக் குலுங்குவதால், மலர்களை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ந்து வருகின்றனர். மலைகளின் அரசி என்று அழைக்கப்ப டும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலா தளமாக உள்ளதால், இம்மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவும். இச்சமயங்களில் தமிழ்நாடு மட்டுமின்றி, லட்சக்கணக்கான வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாபய ணிகளும் வருகை புரிவது வழக்கம். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணி களை கவரும் வகையில், ஆண்டுதோறும் உலக பிரசித்தி பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் மலர்கள் கண்காட்சி நடத்தப் படும். இந்நிலையில் இந்த ஆண்டு மலர்க கண்காட்சிக்காக வெளிநாட்டு ரகங்களான லில்லியம், பெட்டூனியா, சால்வியா உள்ளிட் டவை கொண்டு வரப்பட்டுள்ளன. இன்னும் சீசனே ஆரம்பிக்காத சூழலில், லில்லியம் மலர்கள் தற்போதே பல வண்ணங்களில் பூத்து குலுங்குகிறது. இவை, பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் காட்சி படுத்தப்பட்டுள்ளது. இந்த மலர்களை சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர்

உதகை, மார்ச் 3- நீலகிரி மாவட்டத்தில் பறவைகள் கணக் கெடுக்கும் பணிகளில் வனத்துறையினர், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர் நிலை கள், வனப்பகுதிகள், சதுப்பு நிலங்களில்  வாழக்கூடிய பறவைகளை கணக்கெ டுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு  வருகின்றனர். இந்த கணக்கெடுப்பு பணியில் மாநில முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். அந்த வரிசையில், இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி வனக் கோட்டம், கூடலூர் வனக்கோட்டம் மற்றும்  முதுமலை புலிகள் காப்பகம் என மாவட்டம் முழுவதும் உள்ள வனப்பகுதிகள், சதுப்பு நிலங்கள், நீர் நிலைகளில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இக்கணக்கெடுப்பு பணியில் ஆர்வலர் கள், கல்லூரி மாணவர்கள், வனத்துறை யினர் ஈடுபட்டுள்ளனர். இப்பணி சனியன்று  மாலை துவங்கியது. இதில், பல்வேறு வகை யான பறவைகளும், குளிர் பிரதேசத்தில் வாழக்கூடிய நூற்றுக்கணக்கான பறவை களும் கணக்கிடப்பட்டன.  பறவைகளை நேரடி பதிவு செய்வது, அதன் கூடுகள், அதற்கு தேவையான பழ  வகைகள் உள்ளனவா? என்பதை உறுதி  செய்வது உள்ளிட்டவைகள் இக்கணக்கெ டுப்பின் முக்கிய நோக்கமாகும். அழிவின் பட்டியலில் உள்ள பறவைகள் குறித்து மிகத்  தீவிரமாக கணக்கெடுக்கப்பட்டன.

செல்போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவனுக்கு பாராட்டு

நாமக்கல், மார்ச் 3- தெருவில் கிடந்த செல்போனை காவல் நிலையத்தில் ஒப்ப டைத்த சிறுவனுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தம்மண்ணன் வீதி யைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன் ஜெய்வந்த்(14). இச்சிறு வன், வெள்ளியன்று மாலை, பட்டத்தரசியம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, தெருவில் ஒரு  செல்போன் கிடப்பதை கண்டுள்ளான். அதனை பத்திர மாக எடுத்து வந்த ஜெய்வந்த், நேராக சென்று குமாரபா ளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத் தான். சுமார் ரூ.22 ஆயிரம் மதிப்பிலான செல்போனை ஒப்ப டைத்த அச்சிறுவனை போலீசார் வெகுவாக பாராட்டினர்.  பின்பு அந்த செல்போன் காஸ் கம்பெனியில் பணி யாற்றும் சரவணன் என்பவருக்கு சொந்தமானது என்றும், அந்த வழியாக சிலிண்டர் சப்ளைக்காக சென்ற போது தவற  விட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை காவல் நிலையத்துக்கு வரவழைத்த போலீசார், சிறுவன் கையா லேயே ஒப்படைத்தனர். சிறுவனின் நேர்மைக்கு பாராட்டு  தெரிவித்த போலீசார், ரூ.200ஐ வெகுமதியாக அளித்தனர்.