உதகை, ஜூன் 4- உதகையில் அடுத்தடுத்து மூன்று கார்கள் மீது சுற்றுலா வேன் மோதி யது. இதில், 6 குழந்தைகள் உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர். நீலகிரி மாவட்டத்திற்கு சேலம் சங்ககிரியில் இருந்து வேனில் 3 குடும் பங்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ள னர். அவர்கள் சுற்றுலாவை முடித்து விட்டு வெள்ளியன்று மாலை ஊட்டி யில் இருந்து கோத்தகிரி வழியாக சங்க கிரிக்கு வீடு திரும்பியுள்ளனர். அப் போது, கோத்தகிரி கட்டபெட்டு பஜார் பகுதியில் வந்தபோது திடீரென வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அந்த பகுதியில் நின்று இருந்த 3 கார் கள் மீது அடுத்தடுத்து மோதியது. அப் போது எதிரே வந்த மற்றோரு கார் மீது மோதிய வேன், கார் மீது கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் பய ணித்த 3 பேர் காயங்களின்றி தப்பினர். வேனில் வந்த 6 குழந்தைகள் உள்பட 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச் சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். வேன் கவிழ்ந்த பகுதியில் 40 அடி பள்ளம் உள் ளது. வேன், கார் மீது விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து கோத்த கிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.