districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்

நீலகிரி, நவ.30- குப்பை அள்ளும் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என, அனைத்து கவுன்சிலர்களும் வலியுறுத்தினர்.  நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சியின் மாதாந்திர கூட்டம் தலைவர் வாணீஸ்வரி தலைமையில் புதனன்று நடைபெற்றது. அப்போது, நகராட்சி அலுவலகத்தில் ஊழி யர்கள் பற்றாக்குறையால் பணிகளில் தொய்வு ஏற்பட் டுள்ளது குறித்தும், வார்டுகளில் வளர்ச்சி பணிகள் நடக் காதது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் ஆணையர் ஏகராஜ், நகராட்சி பொறியாளர் ஜெகதீஸ்வரி, நகர்நல அலுவலர் ஸ்ரீதர், துணை தலைவர் ரவிகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு ஓட்டல் தனியாருக்கா?  வலுக்கும் எதிர்ப்பு

கோவை, நவ. 30- தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழ கத்திற்கு சொந்தமான தமிழ்நாடு ஓட்டல் என்ற பெயரை எம ரால்டு ஓட்டல் என பெயர் மாற்றுவதை திரும்ப பெற வேண் டும் என சமூக நீதிக்கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இவ்வமைப்பின் தலைவர் ந.பன்னீர் செல் வம் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுலா  தலங்கள் மற்றும்  அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழ்நாடு ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த தமிழ்நாடு ஓட்டலை தமிழ்நாடு அரசு, எமரால்டு லேக் ரெசார்ட் என் கிற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாக தெரி கிறது. இதனால், தமிழகம்  முழுவதும் உள்ள தமிழ்நாடு ஓட்டல் இனி எமரால்ட் ஓட்டலாக செயல்படும் என கூறப்ப டுகிறது. இந்த முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும் பப் பெற வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ஓட் டலை எமரால்டு என பெயர் மாற்றுவது ஏற்புடையதல்ல. பல இடங்களில் தமிழ்நாடு ஓட்டல் என்கிற பெயர்ப்பலகை அகற்றப்பட்டுள்ளது. மீண்டும் தமிழ்நாடு ஓட்டல் என்கிற பெயர்ப்பலகையை திரும்ப வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

விபத்தில் பள்ளி மாணவன் பலி

உதகை, நவ. 30- நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ஏற்பட்ட இருசக்கர வாகன  விபத்தில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் பலி யானார்.  கேரளா மாநில மலப்புரத்தை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் புதனன்று காலை இருசக்கர வாகனத்தில் ஊட்டிக்கு வந்துள்ளனர். அங்கு பல்வேறு சுற்றுலா தலங் களை பார்த்து, பின்னர் மாலையில் மலப்புரம் திரும்புவ தற்காக, ஊட்டி அருகே பைன் பாரஸ்ட் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, வாகனத்திலிருந்து நிலைத் தடுமாறி கிழே விழுந்ததாக தெரிகிறது. இதில், ஒரு வர் நிகழ்விடத்திலேயே பலியானார். காயமடைந்த மற்றொ ருவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஊட்டி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

கோவை: இன்று மின்தடை

கோவை, நவ,30-  கோவையில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகளை  மின்வாரியம் வெளியிட்டுள் ளது. மாதாந்திர மின் பராம ரிப்பு பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு பகுதி களிலும் ஒரு நாள் மின்தடை  அறிவிக்கப்பட்டு செயல்ப டுத்தப்படுகிறது. அந்த வகை யில், இன்று (டிசம்பர் 1)  கோவை கள்ளிமடை துணை மின் நிலையத்துக்குட்பட்ட காமராஜ் ரோடு, பாரதி நகர்,  சக்தி நகர், ஜோதி நகர்,  ராமானுஜ நகர், நீலிக்கோ ணாம்பாளையம், கிருஷ் ணாபுரம், சிங்காநல்லுார், ஜி.வி.ரெசிடென்சி, உப்பி லிபாளையம், இந்திரா நகர்,  பாலன் நகர், சர்க்கரை செட்டி யார் நகர், என்.ஜி.ஆர்.,நகர், ஹோப்காலேஜ் - சிவில் ஏரோ, வரதராஜபுரம், நந்தா நகர், ஹவுசிங் யூனிட், ஒண் டிப்புதுார் ஒருபகுதி, மசக் காளிபாளையம் மற்றும் மருத்துவக் கல்லுாரி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை  5 மணி வரை  மின் விநியோ கம் இருக்காது என அறி விக்கப்பட்டுள்ளது.

பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு  - விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு, நவ.30- கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு, 2000 கன அடியாக அதிகரித் துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந் துள்ளனர். ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடி நீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.  105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதி யாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நி லையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பவானி சாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. வியாழனன்று காலை நிலவரப்படி பவா னிசாகர் அணையின் நீர்மட்டம் 81.42 அடி யாக உயர்ந்தது. அணைக்கு வினா டிக்கு 477 கன அடியாக நீர் வந்து கொண்டி ருக்கிறது. பவானிசாகர் அணையில் இருந்து  புதனன்று கீழ்பவானி வாய்க்கால் பாச னத்திற்கு 1700 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், வியாழனன்று 2000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட் டம் வியாழக்கிழமை நிலவரப்படி 32 அடி யாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட் டம் 4.52 அடியாகவும், வரட்டுபள்ளம் அணை யின் நீர்மட்டம் 29.79அடியாகவும் உள்ளது.

அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை

தருமபுரி, நவ.30- பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள  அரசு மேல்நிலைப்பள்ளியில் அடிப் படை வசதிகள் இன்றி மாணவ, மாணவி கள் அவதியடைந்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி அருகே உள்ள ஜம்மண அள்ளி  அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 முதல்  12-ம் வகும்பு வரை, சுமார் 200க்கும்  மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று  வருகின்றனர். இந்நிலையில், படிக்கும்  மாணவ, மாணவிகள் பயன்படுத்த போதிய பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர்  வழங்க படாததால் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் மாணவ, மாணவிகள் கழிப் பிடம் செல்லும் பகுதியில் சுகாதார மற்ற முறையில் புதர் மண்டி இருக் கும் நிலையில், விஷ பூச்சிகள் கடிக்கும்  அபாயமும் உள்ளது. மாணவிகள் பயன் படுத்த நாப்கீன்கள் இல்லாத நிலை யில் சிரமப்பட்டு வருகின்றனர். பள்ளி யில் பல்வேறு பராமரிப்பு வேலைகள் செய்யபடாமல் உள்ளதால் பள்ளியில் படிக்கும் கிராமப் பகுதி மாணவ, மாண வியர் பெரும் அவதிபட்டு வருகின்ற னர். மாணவர்களின் அடிப்படை தேவை களை பூர்த்தி செய்யாமல் அலட்சி யமாக இருக்கும் பள்ளி நிர்வாகம் மீது  கல்வி துறை அதிகாரிகள் ஆய்வு செய்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

ரூ.1.26 கோடிக்கு கொப்பரை ஏலம் 

ஈரோடு, நவ.30- ஈரோடு மாவட்டம், பெருந்துறை வேளாண்மை பொருள் கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப் பரை ஏலம் நடைபெற்றது. பெருந்துறை சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த விவசாயிகள் 3,358 மூட்டைகளில் 1,55,000 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந் தனர்.  இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ  ரூ. 73.70-க்கும், அதிகபட்சமாக ரூ.88.05க்கும் விற்ப னையானது. 2ஆம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.33. 19-க்கும், அதிகபட்சமாக ரூ.86.15-க்கும் விற்பனையானது. அந்த வகையில், மொத்தம் ரூ.1.26 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வெறி நாய் கடித்து 35 ஆடுகள் பலி

திருப்பூர், நவ.30- காங்கயம் அருகே பாலசமுத்திரம்புதூர் ஊராட்சிக்கு உட் பட்ட பகுதியில் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடு களை வெறிநாய் கடித்ததில் 35 ஆடுகள் பலியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே பாலசமுத்திரம் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கத்தாங்கன்னி பகுதியை சேர்ந்த வர் நாகராஜ் (வயது 50). விவசாயியான இவர் தோட்டத் தில் ஆட்டுப்பட்டி அமைத்து சுமார் 50 செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். புதனன்று மாலை ஆடுகளை பட்டியில்  அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வியாழனன்று காலை சென்று பார்த்தபோது பட்டிக்குள் 35 ஆடுகள் கொடூர மான முறையில் தாக்கப்பட்டு இறந்து கிடந்ததுள்ளது. மேலும்  சில ஆடுகள் காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டி ருந்ததும், இரவு நேரத்தில் வெறிநாய்கள் பட்டிக்குள் புகுந்து  ஆடுகளை கடித்து குதறியதும் தெரியவந்தது. இதையடுத்து  கால்நடை மருத்துவர் வரவைக்கப்பட்டு காயமடைந்த ஆடுக ளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை குழுவினர் சென்று ஆய்வு  மேற்கொண்டனர். இறந்து போன ஆடுகளின் மதிப்பு ரூ. 2.50  லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. காங்கயம்  பகுதிகளில் கால்நடைகளை தாக்கி வரும் வெறிநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க  வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

தேங்காய் கிலோ ரூ.27க்கு ஏலம்

அவிநாசி, நவ.30- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டு றவு விற்பனை சங்கத்தில்  நடைபெற்ற தேங்காய் ஏலத் தில் ஒரு கிலோ ரூ.27க்கு விற் பனையானது. அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டு றவு விற்பனை சங்கத்தில் வாரம் தோறும் புதன்கிழமை  பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தற் போது, தேங்காய் ஏலம் விற் பனை தொடங்கப்பட்டுள் ளது.  தேங்காய் ஏலம் வாரம்  தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. தற் போது தொடங்கப்பட்ட தேங் காய் ஏல விற்பனை நிகழ்ச் சிக்கு  திருப்பூர் சரக கூட்டு றவு சங்கங்களின் துணைப் பதிவாளர் வெ.தமிழ்செல் வன், திருப்பூர் கூட்டுறவு நகர  வங்கி துணைப்பதிவாளர் எஸ்.முத்துச்சாமி, பொறுப் பாளர்கள் ரா.சரவணக்கு மார், செ.ஜெயகுமாரி,  செய லாட்சியர் சு.பிரபா ஆகி யோர் முன்னிலை வகித்த னர். இதில் கிலோ ரூ.26 முதல் ரூ.27 வரை விற்பனை செய் யப்பட்டது.

அவிநாசியில் நாளை மின் தடை

அவிநாசி, நவ.30- அவிநாசி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறு வதால், டிசம்பர் 2 காலை 9 மணி முதல்  மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிக ளில் மின் விநியோகம் தடைபடும் என மின்வா ரியத்தினர் அறிவித்துள்ளனர். மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலி பாளையம், கருமாபாளையம், செம்பிய நல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம் பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை,  சீனிவாசபுரம், முத்துசெட்டிபாளையம், காம ராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர்  சாலை, வ.உ.சி.காலனி, கிழக்கு, மேற்கு,  வடக்கு ரத வீதிகள், அவிநாசி கைகாட்டிபு தூர், சக்திநகர், எஸ்.பி.அப்பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளையம் ஆகிய பகுதிக ளில் மின் விநியோகம் தடைப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

சர்வதேச யோகா போட்டி:  அவிநாசி மாணவர்கள் சாதனை

அவிநாசி, நவ.30- சர்வதேச யோகா போட்டியில் அவிநாசி மாணவர்கள் சாம் பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர். கோவாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேசிய  அளவிலான யோகா போட்டியில், அவிநாசியை சேர்ந்த ஆர். தக்ஷனா(8), டி.பவிஷ்னா(10), டி.எம்.சபரிஸ் (11) ஆகியோர்  பங்கேற்று தமிழகம் சார்பில் சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.  இதையடுத்து, இவர்கள் 3 பேரும், நேபாளில் நவம்பர் 24 ஆம்  தேதி நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்று,  இந்தியா சார்பில் சாம்பியன் பட்டத்தை வென்றனர். இது குறித்து அவிநாசி தபஸ் யோகா மைய ஆசிரியர்கள்  ரகுபாலன், சத்யா ரகுபாலன் ஆகியோர் கூறியதாவது, இந்த  மாணவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக தபஸ் யோகால யாவில் பயிற்சி பெற்று வருகின்றனர். நேபாளில் நடைபெற்ற  சர்வதேச யோகா போட்டியில், இந்தியா, நேபாளம், பூட்டான்,  ஸ்ரீலங்கா, மலேசியா ஆகிய பகுதியைச் சேர்ந்த 400 க்கு  மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா 12  இடத்தைப் பிடித்தததில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், 5  இடத்தை பிடித்து ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றனர். இந்த 5 பேரில் அவிநாசியைச் சேர்ந்த ஆர். தக்ஷனா, டி.பவிஷ்னா ஆகியோர் இரண்டு தங்கப்பதக்கங்க ளும், டி.எம்.சபரிஸ் வெள்ளி பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

வேன் மீது லாரி மோதியதில் 3 பேர் பலி: ஒருவர் படுகாயம்

சேலம், நவ.30- வாழப்பாடி அருகே வேன் மீது, பார் சல் லாரி நேருக்கு நேர் மோதிய விபத் தில் வேனில் பயணித்த மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். சென்னையில் இருந்து சேலம் நோக்கி சேலம் - சென்னை புறவழிச் சாலையில் வாழப்பாடி கிழக்குக்காடு அருகே வியாழனன்று காலை 7 மணிய ளவில் ஒரு பிக்கப் வேன் வந்து கொண்டி ருந்தது. அப்போது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற பார்சல் லாரி  எதிர்பாரத விதமாக வேன் மீது நேருக்கு  நேர் மோதியது. இந்த கோர விபத்தில் வேனை ஓட்டி வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் மற்றும் அவ ரோடு பயணித்த அரக்கோணம் சுதர்சன், குடியாத்தம் பிரகாசம் உள்ளிட்ட மூவ ரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல றிந்த வாழப்பாடி போலீசார், தீய ணைப்பு படையினர் மற்றும் சுங்கச் சாவடி பணியாளர்கள் ஒன்றிணைந்து, கிரேன் இயந்திரத்தை பயன்படுத்தி,  மூவர் உடலையும் மீட்டு உடற்கூராய் வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயம டைந்த பார்சல் லாரி ஓட்டுநரான திரு நெல்வேலியைச் சேர்ந்த பேச்சிமுத்து பாண்டியன் சிகிச்சைக்காக வாழப்பாடி  அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் ஹரி சங்கரி, காவல் ஆய்வாளர் உமாசங்கர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் சேலம் -  சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. விபத்துக்குள்ளான வாகனங் களை அப்புறப்படுத்தி போலீசார் போக் குவரத்தை சீரமைத்தனர்.

தொப்பூர் சாலை பணிகள் ஜனவரியில் துவங்கும்


தருமபுரி, நவ.30- தொப்பூர் சாலை பணிகள் ரூ.364 கோடி மதிப்பீட்டில்  ஜனவரி மாதம் துவங்கும் என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பி னர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் தெரிவித்துள்ளார். தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளின் பயன்பாட்டுக்காக, நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட கழிவறை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே 19.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்கூடம் ஆகியவற்றை டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் எம்.பி., திறந்து வைத்தார். இதன்பின் அவர் செய்தியாளர் களிடம் பேசுகையில், மொரப்பூர் - தருமபுரி ரயில் பாதை  அமைக்கும் திட்டத்தில் தற்பொழுது நிலம் கையகப்படுத்திய நபர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இரண்டு இடங்களில் பாதைகளை தள்ளிபோட வாய்ப்புள்ளதால் ஆய்வு நடைபெற்று வருகிறது 70 சதவிகிதம் பணிகள் முடிவ டைந்தவுடன் பாதை அமைக்கும் பணிகள் துவங்கும். மேலும், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் இரண்டாம் கட்டம் அமைக்க கூடிய திட்டத்தினை முதல்வர் அறிவிப்பார். தொப்பூர் சாலை  பணிகள் சுமார் ரூ.364 கோடி மதிப்பீட்டில் ஜனவரி மாதம் துவங் கும், என்றார்.