districts

img

தக்காளி விலை உயர்வு

தருமபுரி, ஜூன் 9- மழையால் தக்காளி வரத்து குறைந்துள்ள தால், அதன் விலை உயர்ந்துள்ளதென வியா பாரிகள் தெரிவித்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் அரூர், கோபிநா தம்பட்டி கூட்ரோடு, பொம்மிடி, மொரப்பூர், கம்பைநல்லூர், இருமத்தூர், ஒடசல்பட்டி கூட்ரோடு உள்ளிட்ட இடங்களில், 20க்கும் மேற்பட்ட தக்காளி மண்டிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதி விவசாயிகளிட மிருந்து தக்காளியை கொள்முதல் செய்து, பெட்டிகளில் அடுக்கி சென்னை, பெங்களூரு, கோவை, பாண்டிசேரி உள்ளிட்ட பகுதிக ளுக்கு வியாபாரிகள் விற்பனைக்கு அனுப்பு கின்றனர். உள்ளூர் வியாபாரிகளும் மண்டிக ளில் இருந்து தக்காளியை வாங்கி செல்கின்ற னர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு, 27 கிலோ  கொண்ட ஒரு கிரேடு தக்காளி ரூ.700 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நி லையில் மழையால் தக்காளி வரத்து குறைந் துள்ளதால், ஒரு கிரேடு தக்காளி ரூ.900 முதல் ரூ.1,100 வரை விற்பனையானது. சில்லரை விலையில் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.