நாமக்கல், ஜன.7- குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக் கன் வழங்கும் பணிகள் குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரி சுத் தொகுப்புக்கான டோக்கன் ஞாயி றன்று முதல் செவ்வாய் வரை வழங் கும் பணிகள் நடைபெறவுள்ளது. மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு ஜன.10 முதல் ஜன.14 வரை தொடர்ச் சியாக வழங்கப்படும். என மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ள னர். மேலும் ஆண்டுதோறும் வழங் கப்படும் இலவச வேட்டி, சேலைகள் வேட்டாம்பாடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் வைக் கப்பட்டிருந்ததை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போது கூட்டுறவு சங் கங்கள் இணைப்பதிவாளர் க.பா.அரு ளரசு, துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனிடையே, பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஐந்து ரேசன் கடைகள் செயல்பட்டு வருகிறது. ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்களைப் பெற ஞாயிறன்று காலை ரேஷன் கடை கள் திறப்பதற்கு முன்பே பொது மக்கள் குவிந்தனர். மாதாந்திர ரேசன் பொருட்கள் வாங்க வந்தவர்களும் திரண்டதால், கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து ரேசன் கடை ஊழியர்கள், பொதுமக் களை சமரசப்படுத்தி, குடும்ப அட் டைதாரர்கள் அதிகம் வசிக்கும் பகுதி களுக்கு, தனித்தனியே பிரிந்து சென்று டோக்கன்களை வழங்கி னர்.