districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

நான்கு நாட்களில் கழிப்பறை வசதி மாற்றுத்திறனாளிகள் சங்கம் பாராட்டு

ஈரோடு, ஆக.25- நான்கு நாட்களில் மாற்றுத்திறனாளிக்கு கழிப்பறை கட்டிக் கொடுத்த அதிகாரிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே நல்லாம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட தலித் குடியிருப்பில், முடக்குவாதம் மற் றும் மனவளர்ச்சி குன்றிய 16 வயது சிறுவன் வசித்து வருகிறார். அவருக்கு இயற்கை உபாதைகளைக் கழிக்க கழிவறை இல்லை. இதனால், அவரது தாய் அவரை சுமந்து செல்ல வேண்டிய துயரம் நாள்தோறும் நேர்ந்து வந் தது. இதனையறிந்த தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், அரசின் கவனத் தைக் கொண்டு சென்றது. துறையின் அரசு செயலாளர் தாமஸ் வைத்தியன் உடனடியாகத் தலையிட்டார். பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத் குமார் அந்த வீட்டிற்குச் சென்று, ஒரு வாரத் தில் கழிப்பறை கட்டித்தருவதாக உறுதியளித்தார். தொடர்ந்து, கட்டுமானப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு, நான்கு  நாட்களில் கட்டுமானப் பணிகள் முடிந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. கடமையைச் செய்த அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ப.மாரிமுத்து நன்றி தெரிவித்துள் ளார்.

ஆக.29இல் விளையாட்டுப் போட்டிகள்

தருமபுரி, ஆக.25- தேசிய விளையாட்டு தினத்தைக் கொண்டாடும் வகை யில், ஆக.29 ஆம் தேதியன்று தருமபுரி மாவட்ட விளையாட்ட ரங்கில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்டின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த மேஜர் தயான்சந்த் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், விளையாட்டுப் போட்டிகள் ஆக.29 ஆம்தேதி தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. 19  வயதிற்குட்பட்ட மற்றும் 25 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவி களுக்கு வாலிபால், 100 மீட்டர் தடகள போட்டிகளும், 45  வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்களுக்கு 1 கி.மீ. நடை போட்டிகள், சதுரங்கம், கேரம் ஆகிய விளையாட்டுப் போட்டி கள் நடைபெறும். 19 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் 2006, ஜன.1 ஆம் தேதிக்கு பின்னர் பிறந்தவர்களும், 25 வயதிற் குட்பட்டவர்கள் பிரிவில் 2000, ஜன.1 ஆம் தேதிக்கு பின்னர் பிறந்தவர்களும், 45 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் 1980,  ஜன.1 ஆம் தேதிக்கு பின்னர் பிறந்தவர்களும் கலந்து கொள்ள லாம். இப்போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் விளை யாட்டு வீரர், வீராங்கனைகள் ஆக.29 ஆம் தேதி காலை 8  மணிக்கு உரிய ஆவணங்களுடன் மாவட்ட விளையாட்டரங் கத்திற்கு வர வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளத்தில் விழுந்து வாலிபர் உயிரிழப்பு

கோவை, ஆக.25- தொண்டாமுத்தூர் அருகே சாலையின் நடுவே தோண் டப்பட்ட பள்ளத்தில் விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் நெடுஞ்சாலை யில் தீத்திபாளையம் அருகே உள்ள சாலையில் மேம்பா லம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக சாலையின் நடுவே தோண்டப்பட்ட பள்ளம் குறித்து முன் னெச்சரிக்கை அறிவிப்புப் பலகைகள் இல்லாமல் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், தொண்டாமுத்தூர்  அருகே உள்ள தேவராயபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி கேயன், பெங்களூருவிற்கு சென்றுவிட்டு ஞாயிறன்று கோவை திரும்பிய அவர், தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந் தார். அப்போது, பேரூரை அடுத்த தீத்திபாளையம் அருகே சாலையில் மேம்பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத் தில் விழுந்து தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கார்த்திகேயன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

பவானியாற்றில் தென்பட்ட நீர் நாய்கள்

மேட்டுப்பாளையம், ஆக.25- மேட்டுப்பாளையம் பவானியாற்றில் அழிந்து வரும் உயிரி னமாக கருதப்படும் நீர் நாய்கள் தென்பட்டது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மீன்களை விரும்பி உணவாக உண்ணுகின்ற நன்னீர்  விலங்கான நீர் நாய்கள், ஒரு காலத்தில் காவிரி கரை யோரம் அதிகளவில் வாழ்ந்து வந்தன. நீர்நிலைகளில் இருக் கும் மீன்களின் எண்ணிக்கையை குறைப்பதில் பெரும் பங்க ளிப்பை கொண்டு, உணவு சங்கிலியில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தன இந்த நீர் நாய்கள் இனங்கள். ஆனால், நீர்நிலைகள் பல்வேறு கழிவுகள் கலப்பால் மாச டைதல் மற்றும் மனித செயல்பாடுகளின் தாக்கத்தால் நீர் நாய் கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இந்நி லையில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் பவானியாற்றில் தற் போது நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், மேட்டுப்பாளை யம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படும் சாமண்ணா நீரூந்து நிலையத்தின் அருகே பவானி ஆற்று கரைகளில் ஞாயிறன்று நீர் நாய்கள் தென்பட்டன. அழிந்து வரும் நீர்வாழ் உயிரி னங்களில் ஒன்றான இந்த நீர் நாய்கள் பவானி ஆற்றில் தென்படுவது மிக மிக அரிதானது. புதிதாக தென்பட்ட 10 நீர்  நாய்களை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.

போதைப் பொருளுக்கு எதிராக பேரணி

நாமக்கல், ஆக.25- போதைப் பொருள் பழக்கத்திலிருந்து இளைய சமூ கத்தை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளி பாளையத்தில் நடைபெற்ற பேரணியில் பலர் கலந்து கொண்ட னர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள கொக்கராயன்பட்டை பகுதியில் ஞாயிறன்று தவ்ஹீத் ஜமாத் சார்பில், போதைப் பொருள் பழக்கத்திலிருந்து இளைய சமூ கத்தை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தவ்ஹீத் ஜமாத் கிளைச் செய லாளர் நவீன் பாஷா தலைமை வகித்தார். கொக்கராயன் பேட்டை மேற்கு வீதியிலிருந்து துவங்கிய பேரணி தெற்கு  வீதி, கிழக்கு வீதி, வடக்கு வீதி, வழியாக கொக்கராயன் பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே நிறைவடைந்தது. இந் நிகழ்வில் 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு விழிப்புணர்வு பதா கைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.

செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்

சேலம், ஆக.25- சேலம், நாமக்கல் வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா மற்றும் வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில் களில் பயணிகள் கூட்டம் அதிகளவு இருந்து வருவதால், முக் கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது. அந்த வகையில், மைசூரு - செங்கோட்டை இடையே வரும் செப்.4, 7 ஆகிய தேதிகளில் சேலம், நாமக் கல், கரூர், வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மைசூ ரில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள்  மாலை 4.50 மணிக்கு செங்கோட்டையை அடையும். மறு மார்க்கத்தில், செங்கோட்டை - மைசூரு இடையேயான சிறப்பு ரயில் செப்.5, 8 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். செங் கோட்டையில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு கரூர், நாமக்கல், சேலம் வழியாக மைசூருக்கு பிற்பகல் 2.20 மணிக்கு சென்றடையும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி மருத்துவர் சிறையிலடைப்பு

நாமக்கல், ஆக.25- ராசிபுரம் அருகே மாணவிக்கு தவறான சிகிச்சை அளித்த  போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்து, சிறை யில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள நாம கிரிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு  பயின்று வரும் மாணவி ஒருவருக்கு பள்ளி விடுதியில் தங்கி யிருந்த போது காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாமகிரிப்பேட்டை, ஐயப்பன் நகரில் மருத்துவ சிகிச்சை அளித்து வரும் சீனு என்பவரிடம் மாணவி அழைத்துச் செல்லப் பட்டார். மாணவிக்கு ஊசி போட்டு, மாத்திரை கொடுக்கப் பட்ட சிறிது நேரத்திலேயே மயக்கம் ஏற்பட்டது. உடனடி யாக நாமகிரிப்பேட்டை அரசு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார். சந்தேகத்தின் பேரில் மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில், நாமகிரிப்பேட்டை காவல்  துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட னர். அதில் மாணவிக்கு சிகிச்சை அளித்த சீனு (57) போலி  மருத்துவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

நாமக்கல் ரயில் நிலையத்தில் எம்.பி. ஆய்வு

நாமக்கல், ஆக.25- நாமக்கல் ரயில் நிலையத்தில் நடை பெற்று வரும் சீரமைப்புப் பணிகள் குறித்து  வி.எஸ்.மாதேஸ்வரன் எம்.பி. ஆய்வு செய் தார். நாட்டிலுள்ள முக்கிய நகரங்களின் ரயில்  நிலையங்களை ஒன்றிய அரசு ‘அம்ருத் பாரத்  ரயில் நிலையம்’ திட்டத்தின் கீழ் மேம்படுத்தி  வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ரயில் நிலை யத்தைத் தூய்மையாகப் பராமரிப்பது, காத் திருப்பு அறை, இலவச வைபை வசதி, மின் தூக்கி, நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட வசதி கள் செய்யப்படுகிறது. இந்நிலையில், நாமக் கல் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிகள் குறித்து, நாமக்கல் நாடா ளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் ஞாயிறன்று ஆய்வு செய்தார். இதன்பின்  அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாமக்கல் ரயில் நிலைய சீரமைப்புப் பணி களை விரைந்து முடிக்க வேண்டும் என அறி வுரை வழங்கினேன். இரவு நேரங்களில் பய ணச்சீட்டுகள் ரயில் நிலையத்திள் மேல்பகுதி யில் வழங்கப்படுவதால் பயணிகள் கடும்  சிரமத்திற்கு உள்ளாவதை தவிர்க்க, உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் வலியு றுத்தினேன். மேலும், ரயில் நிலையப் பகுதிக்கு  ஆற்று நீர் இணைப்பு மற்றும் பேருந்து வச தியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்ப டும், என்றார்.