districts

img

சமஸ்கிருத மொழியை கற்பிக்க 5 கிராமங்களை தத்தெடுக்க வேண்டுமாம்

புதுதில்லி, ஜூலை 7- சமஸ்கிருத மொழியை மக்களுக்கு கற்பிக்க 5 கிரா மங்களை தத்தெடுக்க வேண் டும் என்று மத்திய பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. ராஷ்டிரிய சமஸ்கிருதம் சன்ஸ்தான், லால் பகதூர் சாஸ்திரி ராஷ்டிரிய சமஸ் கிருத வித்யாபீடம் மற்றும் திருப்பதி ராஷ்டிரிய சமஸ் கிருத வித்யாபீடம் ஆகிய கல்வி நிறுவனங்கள் சமஸ் கிருத மொழியை கற்பித்து வருகின்றன. இந்த கல்வி நிறுவனங்கள் இரண்டு கிரா மங்களை தத்தெடுத்து சமஸ் கிருத மொழியை கற்பிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய மனிதவள மேம் பாட்டு அமைச்சக மூத்த அதி காரி ஒருவர் கூறுகையில், “சமஸ்கிருதம் 3,500 ஆண்டு களுக்கும் மேலான பழமை யான மொழியாகும். இம் மொழியை மக்களிடையே வளர்க்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வரு கிறது. கடந்த மாதம் மத்திய மொழி நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டத்திற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தலைமை தாங் கினார். அப்போது சமஸ் கிருத மொழியை ஊக்கு விக்கும் மற்றும் பாதுகாக்கும் வகையில் மத்திய சமஸ் கிருத கல்வி நிறுவனங்க ளுக்கு அருகில் குறைந்தது இரண்டு சமஸ்கிருத மொழி பேசும் கிராமங்களையாவது உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்” என்றார்.  இதனையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ராஷ்டி ரிய சமஸ்கிருத சமஸ்தான் கல்வி நிறுவனம் 5 கிரா மங்களை தத்தெடுக்க வேண்டும் என்று உத்தர விட்டுள்ளது. ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தான் 5 கிராமங்களைத் தத்தெடுக்க ஒப்புக்கொண்டுள்ளது.