districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

திருமூர்த்தி அணையில் இருந்து மண் எடுக்க நேரத்தை நீட்டிக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

உடுமலை, ஜூலை 18 – திருமூர்த்தி அணையில் இருந்து மண் எடுப்பதற்கு காலை  6 மணி முதல் மாலை 6 மணி வரை நீட்டித்து உதவும்படி தமிழ் நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு.பரம சிவம் கோரியுள்ளார்.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு தென்னை விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பரமசிவம் வியா ழனன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திரு மூர்த்தி அணையில் இருந்து வண்டல் மண் மற்றும் மண் எடுக்க  ஆட்சியர் உத்தரவின் அடிப்படையில் வட்டாட்சியர் மூலம்  அனுமதி வழங்கப்பட்டது. திருமூர்த்தி அணையில் புல எண் கள் 261, 262, 263 மற்றும் 264 ஆகியவற்றில் இருந்து 1 லட்சத்து  8ஆயிரம் கன மீட்டர் வண்டல் மண் மற்றும் மண் எடுக்க அனு மதி வழங்கி அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது  புல எண் 264-க்கு மட்டும் விண்ணப்பித்த விவசாயிகள் சில ருக்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், அந்த பகுதியில் அனுமதித்த அளவு முடிந்துவிட்டதாக தற்போது விவசா யிகள் விண்ணப்பிக்கும்போது பூஜ்ஜியம் (0) எனக் காட்டுகி றது. அது மட்டுமின்றி புலம் எண்கள்: 261, 262, 263-க்கும் பூஜ்ஜி யம் என்றே காட்டுகிறது. 

எனவே, இதன் மீது ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து  விவசாயிகள் தொடர்ந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து  மண் எடுத்திட உதவிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மழையினால் மண் எடுக்க முடியாமல் நாட்கள்  கடந்து விட்டதால், இனிமேல் மண் எடுக்கும் நேரத்தை காலை  6 மணி முதல் மாலை 6 மணி வரை நீட்டித்து உதவிடுமாறும் விவ சாயிகள் சார்பில் கேட்டுக் கொள்வதாக சு.பரமசிவம் கூறி யுள்ளார்.

இன்று மின் தடை

 ஏரிப்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட  சூரிபாளையம், புதுநல்லூா், தண்ணீர்பந்தல்பாளையம்,  ஏரிப்பாளையம், காமநாயக்கன்பாளையம், புதுப்பாளை யம், ஆலம்பாளையம், சேரன் நகர், நல்லிக்கவுண்டம்பா ளையம், வெங்கிகல்பாளையம் ஆகிய பகுதிகளில் வெள் ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்  விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தி ஏலம்

அவிநாசி, ஜுலை18- அவிநாசி கூட்டுறவு விற் பனை சங்கத்தில் புதன்கி ழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில்  ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்துக்கு  பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது.