districts

img

அரசுத்துறையில் கொத்தடிமை, சுரண்டல் முறையை புகுத்துவதா

தருமபுரி நவ, 19 –  அரசுத்துறையில் கொத்தடிமை, சுரண்டல் முறையை கொண்டு வரும் ஏற்பாடுதான் அரசாணை 152 மற்றும் 115 பிரிவுகள், இதனை ஒருபோதும் அரசு ஊழியர் சங்கம் ஏற்காது என  அரசு ஊழியர் சங்க பேரவை தீர்மானம்  நிறைவேற்றியுள்ளது.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்  தருமபுரி மாவட்ட 13ஆம் ஆண்டு பேரவை கூட்டம் சிஐடியு கூட்டரங்கில் தோழர் ஆர்.முத்துசுந்தரம் நினைவ ரங்கத்தில்  நடைபெற்றது. மாவட்ட  துணைத்தலைவர் பி.எஸ்.இளவேனில் தலைமை தாங்கினார். சி.காவேரி வர வேற்றார்.  மாநில துணை பொதுச்செயலாளர் மு.சீனிவாசன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செய லாளர் பொருளாளர் கே.புகழேந்தி ஆகி யோர் வேலை அறிக்கை மற்றும் வரவு -செலவு அறிக்கையை முன்வைத் தனர்.  இதில், சிஐடியு மாவட்ட செயலாளர்  பி.ஜீவா உள்ளிட்ட சகோதர சங்கங் களின் நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர்.  அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு சிறப்புரை யாற்றினார். இதில், பழைய ஓய்வூதிய திட் டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். காலை சிற்றுண்டி திட் டத்தை சத்துணவு ஊழியர்கள் மூல மாக செயல்படுத்த தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். கொத்த டிமை மற்றும் சுரண்டல் ஊதிய முறை களை அரசுத்துறைகளில் கொண்டு வர துடிக்கும் அரசாணை எண்கள்.  152 மற்றும் 115-ஐ முற்றிலுமாக  தமிழ்நாடு அரசு ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. மாநில துணைத்தலைவர் கோ.பழனியம்மாள் நிறைவுறையாற்றி னார். மாவட்ட இணைச்செயலாளர் ஆர்.ஜெயவேல் நன்றி கூறினார்.