districts

img

அணுகுண்டுகளை அழிக்க ஏகாதிபத்தியத்தை ஒழிக்க வேண்டும்

திருப்பூர், ஆக. 10 – உலகில் அணுகுண்டுகளை முற் றாக அழித்து, யுத்த அபாயத்தில்  இருந்து மக்களைக் காப்பாற்றுவ தற்கு ஏகாதிபத்தியத்தை ஒழிக்க  வேண்டியது அவசியம் என்று ஹிரோ ஷிமா, நாகசாகி நினைவு தினக் கருத் தரங்கில் தெரிவிக்கப்பட்டது. திருப்பூரில் தோழர் கே.தங்க வேல் நினைவு வாசிப்பு வட்டத்தின்  சார்பில் ஹிரோஷிமா, நாகசாகி தினம் ஆகஸ்ட் 9 புதனன்று கடைப்பி டிக்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல்  இயக்க மாநிலச் செயலாளர் வி.ராம மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அறிவியல் இயக்க  மாவட்டச் செயலாளர் ச.கௌரிசங் கர் ஹிபாகுஷா என்ற புத்தகத்தை  அறிமுகம் செய்து பேசினார். ஹிரோ ஷிமா, நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளால் ஏற்பட்ட பேரழிவில் தப்பிப் பிழைத்தவர்கள் சந்தித்த துயரங்களை, கொடூர ரணங்களைப் பற்றியும், அணு குண் டின் ஆபத்தைப் பற்றியும் எடுத்துக் கூறினார். இதைத் தொடர்ந்து அறிவியல்  இயக்கத்தைச் சேர்ந்த கே.முகிலன்,  சமீபத்தில் வெளியாகி வெற்றிக ரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஓபன் ஹெய்மர் என்ற திரைப்பட விமர் சனத்தை நுட்பமாகவும், விரிவாக வும் முன்வைத்தார். முன்னதாக அணுகுண்டின் பயங்கர விளைவுகள்  பற்றி குறும்படமும், ஹிரோஷிமா போல் சென்னையில் நேரிட்டால் எத்த கைய பாதிப்புகள் ஏற்படும் என்ற படக் காட்சியும் ஒளிபரப்பப்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தலும், மக் களின் வாழ்நிலையும் என்ற தலைப் பில் தமுஎகச மாவட்டக்குழு உறுப்பி னர் வே.தூயவன் பேசினார். அவர்  கூறுகையில், உலகில் தற்போது ஏறத் தாழ 13 ஆயிரம் அணுகுண்டுகள் உள் ளன. கலைக்கப்பட்டதாக சொல்லப் பட்டாலும் இன்னும் முழுமையாக  அழிக்கப்படாத அணுகுண்டுகளை யும் கணக்கில் கொண்டால் சுமார் 25 ஆயிரம் அணுகுண்டுகள் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. உலகை மேலாதிக்கம் செலுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் வெறிதான் அணுகுண்டு வெடிக்க வைத்ததற்கு காரணம்.  

தற்போது உலகம் கடும் பொரு ளாதார நெருக்கடியில் சிக்கி இருக் கும் நிலையில், ஏகாதிபத்திய நாடு கள் நேட்டோவின் மூலம் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. யுத் தம் இல்லாமல் ஏகாதிபத்தியத்தால் உயிர் வாழ முடியாது. நேட்டோ தற் போது ரஷ்யாவையும், சீனாவையும் சுற்றி வளைக்கும் செயலில் ஈடு பட்டு வருகிறது. ஒருபுறம் மக்கள் வறுமை, வேலையின்மை, பட்டினி என துயரங்களை சந்தித்துக் கொண் டிருக்கும்போது யுத்தத்தின் மூலம்  ஏகாதிபத்தியம் லாபம் ஈட்டத் துடிக் கிறது. எனவே மக்களின் வாழ்வாதா ரத்தைப் பாதுகாப்பதற்கான போராட் டத்துடன், ஏகாதிபத்தியத்தை ஒழிக் கும் போராட்டத்தை இணைத்து  நடத்த வேண்டும். உலகில் அணு குண்டுகள் முற்றாக அழிக்கப்பட வேண்டுமென்றால் யுத்தவெறி பிடித்த ஏகாதிபத்தியத்தையும் அழித் தெழிக்க வேண்டும் என்று கூறி னார். இந்நிகழ்வின் நிறைவாக யுத்தத் திற்கு எதிராக சமாதானத்தை வலியு றுத்தும் பாடலை அறிவியல் இயக்கத் தைச் சேர்ந்த ஷாருக்கான் பாடினார்.  இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்ட னர்.