தருமபுரி, செப்.26- வரும் நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளையும், அதன் எஜமா னர்களையும் விரட்டியடிக்க வேண் டும் என தருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம், காரிமங்க லம் அருகே உள்ள கெரகோட ஹள்ளியில் திமுக ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் செவ்வா யன்று நடைபெற்றது. இக்கூட்டத் தில் திமுக இளைஞரணி செயலா ளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசு கையில், டிசம்பர் மாதம் சேலத்தில் நடைபெறும் இளைஞரணி இரண் டாவது மாநாட்டிற்கு இளைஞர் களை சந்தித்து மாநாட்டை வெற்றி பெற அழைப்பு விடுக்க வந்துள் ளேன். கலைஞர் நூற்றாண்டில் நடை பெறும் மாநாடு என்பதால், இது மிகப்பெரிய சிறப்பானதாக அமை யும். தருமபுரி மாவட்டத்தில் தான் 1965 கலைஞர், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய் யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின், படிப் படியாக உழைத்து, முதல்வர் பொறுப்பிற்கு வந்துள்ளார். யாரு டைய காலிலும் விழுந்து முதல மைச்சராகவில்லை. திமுகவில் எத் தனையோ அணிகள் இருக்கிறது. எதை கொடுத்தாலும், வெற்றிகர மாக முடித்து கொடுப்பது இளைஞ ரணி தான். மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாடு குறித்து நான் சொல்ல தேவையில்லை. அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் ஏன் கலந்து கொண்டோம் என் றும், நடத்தியவர்களுக்கும் ஏன் நடத்தினோம் என்றும் தெரிய வில்லை. இதில் கொள்கை பற்றி பேசவில்லை. அடுத்த நாள் ஊட கங்களில் விவாதம் அங்கு பேசப் பட்ட கொள்கைகள் குறித்து அல்ல, புளிசாதம் குறித்துதான். கடந்த செப்.15 ஆம் தேதியன்று மகளிர் உரிமைத் திட்டம் துவங்கப் பட்டது. இதனால் மகளிர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை தெரியாமல் அதிமுகவும், பாஜக வும் குழம்பி போய், மக்களை குழப்பி விட்டுள்ளனர்.
இன்று புதுப் பிரச்சனை. காலையில் ஒருவர் கூட் டணி இல்லை என்கிறார். மாலை யில் கூட்டணி என்கிறார். நான்கு முன்னாள் அமைச்சர்கள் திருட்டுத் தனமாக தில்லி சென்றுள்ளார்கள். தேர்தலின் போது இணைந்து வரு வார்கள். அதில் ஒருவர் திருடன், ஒருவர் கொள்ளைக்காரன். திமுக ஆட்சிக்கு வந்ததும், கலைஞர் குடும் பம் தான் வாழ்கிறது என்று மோடி பேசுகிறார். ஆனால், உங்களால் அதானி குடும்பம் தான் பிழைத்தி ருக்கிறது. அதானியுன், மோடி ஒன்றாக விமானத்தில் சென்றார். இதை புகைப்படத்துடன் விளக்க வேண்டும் என ராகுல் காந்தி கேட் டார். அதனால் ராகுல் காந்தியின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் சென்று வெற்றி பெற்றார். இதுதான் இந் தியா கூட்டணிக்கான வெற்றி. வரு கிற தேர்தலில் அடிமைகளையும், அதன் எஜமானர்களையும் விரட்டி யடிக்க வேண்டும். நம்முடைய கூட் டணி கொள்கை கூட்டணி என்பதை நிரூபிக்க வேண்டும், என்றார். இக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல் வம், தருமபுரி நாடாளுமன்ற உறுப் பினர் இரா.செந்தில்குமார், திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் தடங் கம் பெ.சுப்பிரமணி, மேற்கு மாவட் டச் செயலாளர் சி.பழனியப்பன், இளைஞர் அணி கிழக்கு மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன், மேற்கு மாவட்ட அமைப்பாளர் சிவ குரு உட்பட பலர் கலந்து கொண்ட னர்.