பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கின. கோவை, வரதராஜபுரத்திலுள்ள தேசிய பார்வையற்றோர் இணையத்தில் நடைபெற்ற வகுப்புகளை அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் ஆர்.மகேஸ்வரன் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட அரசு வேலை வாய்ப்பு அலுவலர் சத்திய பார்வதி, பார்வையற்றோர் இணையத்தின் ஒருங்கிணைப்பாளர் சதா சிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.