districts

img

தேசிய அளவிலான நீச்சல் போட்டி திருப்பூர் மாணவர்கள் சாதனை

திருப்பூர் நவ.20- திருப்பூர் போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்  ரவிக்குமார். இவரது மகன்கள் உபநிஷந்த் மற்றும் ஜிஹாந்த்.  இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம்  வகுப்பு மற்றும்  6ஆம்  வகுப்பு படித்து வருகின்றனர். இருவ ரும் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நீச்சல் பயிற்சி செய்து  வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் விருதுநகர் மாவட் டத்தில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில், இருவரும் பங்கேற்று வெற்றி பெற்றனர். இதைய டுத்து கடந்த வாரம் டெல்லியில் தேசிய அளவிலான நீச்சல்  போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா,  கேரளா,  உட்பட 23 மாநிலங்களை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனை கள் கலந்து கொண்டனர். இதில், பத்து வயதுக்கு உட்பட்ட  பிரிவில் ஜிஹாந்த் தங்க பதக்கம் வென்றுள்ளார். அதேபோல்  15 வயதுக்கு உட்பட்ட பிரிவில் உபநிஷாந்த் இரண்டு பிரிவுக ளில் இரண்டு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள் ளார்கள். இந்நிலையில், டெல்லியில் இருந்து திருப்பூர் திரும் பிய மாணவர்களை திருப்பூர் ரயில் நிலையத்தில் மாணவர்க ளின் பெற்றோர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.