districts

img

13 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் திருப்பூர் மன்னரை மேம்பாலப் பணி!

திருப்பூர், ஆக.25- திருப்பூர் மாநகரத்தில் தொட் டிய மன்னரை பகுதியில் 13 ஆண்டு களுக்கு முன்பு தொடங்கப்பட்ட மேம்பாலப் பணி அப்படியே முடங் கிக் கிடக்கிறது. போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வரும் திருப் பூரில், இப்பாலத்தின் பணியை முழு மையாக கட்டி முடிக்காமல் அரசு நிர்வாகம் மெத்தனமாக உள்ளது. 2006 - 2011 திமுக ஆட்சிக்காலத் தில் திருப்பூரில் பல்வேறு பாலங் கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப் பட்டது. அதில் ஒன்று தொட்டிய  மன்னரைப் பகுதியில் ரயில்  பாதைக்கு குறுக்காக அமைக்கத் திட்டமிடப்பட்ட சாலை மேம்பாலம் ஆகும். தொட்டிய மன்னரைப் பகுதி யில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப் படுகிறது. நாளொன்றுக்கு 98 ரயில் கள் இந்தப் பாதையை கடந்து செல் கிறது. ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படும் நிலையில், சாலை மேம் பாலம் அமைக்கப்பட்டால் இந்த வட் டாரத்தில் இருக்கும் மக்களுக்கு  பேருதவியாக இருக்கும் என்று எதிர் பார்த்தனர். மேலும் ரயில்வே தண்ட வாளத்தின் குறுக்காக மேம்பாலம் கட்டுவதற்கு ரயில்வே துறையிடம் அனுமதி வாங்கி அந்தப் பகுதியில் மட்டும் மேம்பாலம் அமைக்கப்பட் டுள்ளது. ஆனால் அதன் இருபுற மும் அமைக்க வேண்டிய பாலப் பணி நடைபெறவில்லை. இதனால் ஊத்துக்குளி சாலை தொட்டிய மன் னரைப் பகுதி, அதன் எதிர்ப்புறம் மன்னரை, கவுண்டநாயக்கம்பாளை யம், வழியாக பெருமாநல்லூர் சாலை புதிய பேருந்து நிலையம் பகுதிக்கு செல்வதற்கு இணைப்பு ஏற்படுத்தப்படாத நிலையில் அன் றாடம் பயணிக்கும் தொழிலாளர் கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி கள், அரசு ஊழியர்கள் என ஆயிரக் கணக்கானோர் கடுமையாக பாதிக் கப்படுகின்றனர். குறிப்பாக காலை 8 மணி முதல் 9 மணிக்குள்ளாக அடுத்தடுத்து ரயில்கள் வந்து செல் லும் நிலையில் இங்குள்ள ரயில்வே கேட் தொடர்ந்து மூடப்பட்டு இருக் கும். இதனால் பயணிகள் கடந்து செல்ல முடியாது.  மாற்றுப் பாதையில் சுற்றிச் செல் வது என்றால் பல கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டி இருக்கி றது. மேலும் அருகாமையில் இருக் கும் ஆர்.கே.ஜி நகர் பகுதியில் மழைக்காலங்களில் ரயில்வே நுழைவுப் பாதை ஒன்றில் தண்ணீர் தேங்கி பயணிக்க முடியாத நிலை  ஏற்படுகிறது. இதனால் பயணிகள் இரு வழிகளிலும் சிரமப்படுகின்ற னர். மேம்பாலத்தின் இரு பகுதிகளி லும் இணைப்புச் சாலைக்காக நிலம் கையகப்படுத்துவதில் உரிய முன் னேற்பாடுகள் செய்யாமல் பணி  தொடங்கப்பட்டது சிக்கலை ஏற்ப டுத்தி விட்டது. நிலம் கையகப் படுத்துவதில், அங்குள்ள நில உரி மையாளர்கள் சிலர் வழக்குக்குச்  சென்றதால் தாமதம் ஏற்பட்டது. எனி னும் அரசு நிர்வாகம் தலையிட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு கண்டால் மேம்பாலப் பணியை செய்து முடித்தி ருக்க முடியும். 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடிந்த பிறகு. 10  ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில்  இருந்த போதும் இப்பிரச்சனையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.  2021 ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நிலுவையில் இருந்த பாலப் பணிகள் அனைத் தும் விரைந்து முடிக்கப்படும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரி வித்திருந்தார். அதன்படி திருப்பூர் நகரில் நடராஜா தியேட்டர் அருகே உள்ள பாலம், நொய்யல் ஆற்றின்  கரையில் எம்ஜிஆர் சிலை அருகே  உள்ள பாலம், அணைப்பாளையம் பகுதியில் உள்ள பாலம் போன்ற வற்றின் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. எனினும் மன்னரையில் உள்ள இந்த பாலப் பணி எவ்வித முன்னேற்றமும் இல் லாமல் அப்படியே கிடப்பில் கிடக் கிறது. எனவே மாநில அரசு நிர்வா கம் இந்த பாலப் பணியை விரைந்து மேற்கொண்டு நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.  குறிப்பாக, திருப்பூரின் கிழக் குப் பகுதியில் ஊத்துக்குளி சாலை யில் இருந்து பெருமாநல்லூர் சாலைக்கு வருவதற்கு இந்த பாலம்  அமைக்கப்பட்டால் பேருதவியாக இருக்கும். ஊத்துக்குளி சாலை, கவுண்டநாயக்கன்பாளையம்,  எம்.எஸ்.நகர், புதிய பேருந்து நிலை யம் பகுதி ஆகியவற்றில் போக்கு வரத்து நெரிசல் மிகுதியாக இருக் கிறது. எனவே நகர விரிவாக்கம், போக்குவரத்து நெருக்கடி ஆகிய வற்றை கருத்தில் கொண்டு 13 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் இந்த பால வேலையை விரைவு படுத்த வேண்டும் என அப்பகுதி மக் கள் வலியுறுத்தியுள்ளனர்.