districts

திருப்பூர் பின்னலாடைத் தொழில் நவீன மாற்றங்களுக்கு ஏற்ப மறுமலர்ச்சி அடையும்

திருப்பூர், அக். 12 - நவீன மாற்றங்களுக்கு ஏற்ப திருப் பூர் பின்னலாடைத் தொழில் மாற்ற மடைந்து மறுமலர்ச்சி பெறும் என்று ஐகேஎப்ஏ தலைவர் ஏ.சக்திவேல ்கூறி னார். திருப்பூர் ஐகேஎப்ஏ வளாகத்தில் 50 ஆவது இந்திய பின்னலாடை பொன் விழா கண்காட்சி தொடக்க நிகழ்வின் போது செய்தியாளர்களைச் சந்தித்த ஏ. சக்திவேல் கூறியதாவது: வழக்கமாக நடைபெறும் பின்னலாடை கண்காட்சிக ளில் இருந்து 50ஆவது பொன்விழா பின் னலாடை கண்காட்சி முற்றிலும் வித்தி யாசமானதாக அமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட் பம், நீடித்த நிலையான வளர்ச்சி, மறு சுழற்சி மற்றும் மறு பயன்பாட்டுத் தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் மயமாக் கல் ஆகிய புதுமைகளைப் புகுத்தும்  வகையில் இக்கண்காட்சி ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. உலகில் நுகர்வோர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எதிர் பார்ப்புக்கு ஏற்ப ஆடைகளை தயா ரித்துத் தருவதில் திருப்பூர் புதுமைக ளைப் புகுத்தி வருகிறது. இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாதபடி 12 ஆண்டுகளுக்கு முன்பே  பூஜ்ய கழிவு மறுசுழற்சி தொழில்நுட் பத்தை சாயக்கழிவு சுத்திகரிப்புக்கு பயன்படுத்திய நகரம் திருப்பூர். பருத்தி  அடிப்படையிலான ஆடை தயாரிப்பு என்பதில் இருந்து எம்எம்எப் எனப்படும்  செயற்கை நூலிழைகளில் தயாரிக்கப்ப டும் ஆடை உற்பத்திக்கு திருப்பூர் மாறி  வருகிறது. இதுவரை 10 சதவிகிதம் பாலிஸ்டர், 90 சதவிகிதம் பருத்தி நூல்  கலவையில் ஆடை தயாரிக்கப்பட்டு வந்தது. இனி 50:50 என்ற அடிப்படையில்  செயற்கை நூலிழை பயன்படுத்தி ஆடைகள் தயாரிக்கும் நிலை உருவாகி வருகிறது. கழிவுத் துணி, கழிவு நூல்,  பெட் பாட்டில் ஆகியவற்றைக் கொண்டு  ஆடைகள் தயாரிப்பது, அதேபோல் சுற் றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத முறையில் பசுமை உற்பத்தி என்பதிலும்  கவனம் செலுத்தி வருகிறோம். உடனடி சந்தை வாய்ப்பு பெரியள வுக்கு கிடைக்காவிட்டாலும் நீண்ட  காலத் தொலைநோக்கு அடிப்படை யில் திருப்பூர் ஜவுளித் தொழில் மிகப் பெரும் வளர்ச்சி பெறும். இந்த கண் காட்சி மிகப்பெரும் மாற்றத்தை, மறு மலர்ச்சியை உருவாக்கும். இந்தியா வில் மற்ற ஜவுளி மையங்களுக்கு முன்னோடியாக திருப்பூர் புதுமைக்கு ஏற்ப மாற்றம் அடைந்து வருகிறது, என்று ஏ.சக்திவேல் கூறினார். முன்னதாக இக்கண்காட்சியைத் தொடக்கி வைத்த எத்திக்கல் டிரேடிங்  இனிசியேட்டிவ் என்ற நிறுவனத்தின் நிர் வாக இயக்குநர் பீட்டர் மெக் அலிஸ் டர் உள்ளிட்டோர் திருப்பூர் பின்ன லாடைத் தொழில் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையிலும், நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியும் சிறப் பாக முன்னேற்றம் அடைந்து வருவ தாகக் கூறினர்.