திருப்பூர் காங்கேயம் சாலை பெரியகடை வீதி சந்திப்பில் உரிய பாதுகாப்புத் தடுப்பு இல்லாமல் உள்ள இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தடு மாறி பள்ளத்தில் வாகனத்துடன் விழுந்தார். தலைகவசம் அணிந்திருந்த நிலையில் நல்வாய்ப்பாக அவர் தப்பினார். இந்த இடத்தில் உரிய தடுப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அப்பகுதியினர் கூறினர்.