districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

திருப்பூர், பிப்.11- தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு மாநகராட்சி நடுநி லைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர்  தா.கிறிஸ்துராஜ் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி னார். திருப்பூர் மாநகராட்சி, தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் திங்களன்று நடைபெற்ற தேசிய குடற் புழு நீக்கும் முகாமில் மாவட்ட ஆட்சியர் திரு.தா.கிறிஸ்து ராஜ் குடற்புழு நீக்க மாத்திரைகளை பள்ளி மாணவ, மாணவி யர்களுக்கு வழங்கினார். மேலும், குடற்புழு நீக்கம் குறித்து  பள்ளி மாணவ, மாணவியர்கள் சார்பில் விழிப்புணர்வு கலை  நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதைதொடர்ந்து, தேசிய  குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குடற்புழு நீக்க உறுதி மொழி பள்ளி மாணவ, மாணவியர்கள் எடுத்துக்கொண்ட னர். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் எஸ்.ராமமூர்த்தி, மாநகர நல அலுவலர் முருகானந்தம், தொடர்பு டைய அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவி யர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்றுமதி கட்டணத்தை குறைக்க திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வலியுறுத்தல் 

திருப்பூர், பிப்.11- சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படும்போது. ஏற்படும் கட்டண உயர்வை கட் டுப்படுத்த வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  லாஜிஸ்டிக் மற்றும் ஏற்றுமதி துறைகளை சார்ந்த முக்கிய பங்குதாரர்களை ஒன்றி ணைக்கும் வகையில் கார்கோ கனெக்சன்ஸ்  கான்களேவ் (மாநாடு ) -2025 கோவையில்  நடைபெற்றது. இதில், திருப்பூர் ஏற்றுமதியா ளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திருக்கும ரன் கலந்து கொண்டு பேசுகையில், இந்தியா வில் சிறு குறு நடுத்தர பின்னலாடை உற்பத்தி  மையமாகவும் பசுமை சார் ஆடை உற்பத்தி  மையத்தில் ஒன்றாகவும் திருப்பூர் முக்கிய பங்காற்றி வருகிறது.  திருப்பூரில் 90 சதவிகிதம் சிறுகுறு நிறு வனங்கள் மற்றும் வளம் குன்றா வளர்ச்சிக்கு  தொழில்துறை நடைமுறைகளில் முன்னோடி யாகவும் திருப்பூர் உள்ளது. ஜீரோ டிஸ்சார்ஜ்  முறையை செயல்படுத்திய இந்தியாவில் முதல் மாவட்டமாக திருப்பூர் உள்ளது. ஒரு  நாளைக்கு 13 கோடி லிட்டர் தண்ணீரை 96 சதவிகிதம் மறு பயன்பாட்டு விகிதத்துடன் மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. புதுப் பிக்கத்தக்க எரிசக்தி துறையிலும் முன்னேற் றங்களை அடைந்துள்ளது. காற்றாலைகள் மூலம் 2000 மெகாவாட் மின்சாரத்தையும், சோலார் மூலம் 250 மெகாவாட் மின்சாரத்தை யும் உற்பத்தி செய்கிறது. இதில் 350 மெகா வாட் தொழில்துறை நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. உபரி மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கப் பட்டு வருகிறது. 22 லட்சம் மரங்களை நட்டு  காடு வளர்ப்பு முயற்சிகளை திருப்பூர் தொழில்துறை மேற்கொண்டு வருகிறது.  திருப்பூரில் லாஜிஸ்டிக் துறையில் மிகப் பெரிய சாத்திய கூறுகள் உள்ளது. திருப்பூர்  ஏற்றுமதியாளர்களுக்கு பல லாஜிஸ்டிக் சவால்கள் உள்ளது. 15 நாட்களுக்கு ஒரு  முறை மாறும் ஏற்ற இறக்கமான லைனர்  செலவுகளும் உள்ளது. கூடுதலாக இந்தியா விலிருந்து நேரடி கப்பல் இல்லாததால் ஏற்று மதியாளர்கள் கொழும்புவை நம்பி இருக்க  வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.  இது செயல்திறன் மற்றும் உலகளாவிய சந்தை போட்டித் தன்மையை பாதிக்கிறது. முன்ன தாக ஐரோப்பாவிற்கு நேரடி கப்பல் இயக்கப் பட்டு வந்த நிலையில், இந்த சேவை கடந்த  1ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. இதனால்  சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி கட்ட ணங்கள் அதிகரித்திருத்துள்ளது.  ஏற்றுமதியாளர்களுக்கு பயனளிக்கும் மற்றும் செயல்பாடுகளை நெறிப்படுத்தும் வகையில் ஒரு பொதுவான விலை நிர்ணய  கட்டமைப்பை விவாதித்து அமைப்பதற்கு அனைத்து தொடர்புடைய சங்கங்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றார். முன்னதாக, இதில் எம்எஸ்சி ஏஜென்சி  பிரைவேட் லிமிடெட்டின் மூத்த துணைத் தலை வர் கிருஷ்ணகுமார், திருப்பூர் ஏற்றுமதியா ளர்கள் சங்க உறுப்பினர்களை விழிஞ்சம்  துறைமுகத்தை பார்வையிட்டு கலந்துரை யாட அழைப்பு விடுத்தார். ஏற்றுமதியா ளர்களின் தேவைகளை புரிந்து கொள்ளவும்  லாஜிஸ்டிக் செயல்பாடுகளை உறுதி செய்ய வும் இது பயனுள்ளதாக அமையும் என் றார்.