districts

img

திருப்பூர் புத்தகத் திருவிழா இன்று தொடங்குகிறது

திருப்பூர், ஜன.22– தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட  நிர்வாகம், திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட்  இணைந்து நடத்தும் 21ஆவது திருப்பூர்  புத்தகத் திருவிழா வியாழக்கிழமை தொடங்குகிறது. திருப்பூர் காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல் மைதானத்தில் நடை பெறும் இந்த புத்தகத் திருவிழாவை வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு, மாநில அமைச்சர்கள் மு.பெ.சாமிநா தன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர்  தொடங்கி வைக்கின்றனர். மாவட்ட  ஆட்சியர், மாநகராட்சி மேயர் மற்றும்  நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் கள் கலந்து கொள்கின்றனர். புத்தகத் திருவிழாவிற்கு அரங்கு கள் அமைப்பதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்து, புதனன்று  புத்தகப் பதிப்பாளர், வெளியீட்டாளர்க ளுக்கு அரங்கங்கள் குலுக்கல் முறை யில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மொத் தம் 140 அரங்கங்கள் அமைக்கப்பட் டுள்ளன. புத்தக கண்காட்சியில் பங்கேற் கும் நிறுவனத்தினர் செவ்வாயன்று புத்த கங்களைக் கொண்டு வந்து அரங்கங்க ளில் அடுக்கி வைக்கத் தொடங்கினர். கண்காட்சியின் ஒரு பகுதியாக மாலை நேர கருத்தரங்குகள், கலைநி கழ்ச்சிகள் நடத்தவும் தனி மேடை ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. இத்துடன்,  காலை நேரங்களில் பள்ளி மாணவர்கள்  பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படு கின்றன. வாகன நிறுத்தங்கள், சிற் றுண்டி மற்றும் கழிவறை வசதிகள் ஏற் பாடு செய்யப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த திருவிழா பிப்ரவரி  2ஆம் தேதி வரை மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகிறது. அனைவருக்கும் அனுமதி இலவசம், இங்கு வாங்கும்  புத்தகங்களுக்கு சிறப்புக் கழிவுகள் வழங்கப்படும் என்று புத்தகத் திரு விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.