திருப்பூர், ஜன. 19 - தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வா கம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து 19 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவை ஜன வரி 27ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை 10 நாட்கள் நடத்துகின்றனர். இந்த புத்தகத் திருவிழா திருப்பூர் காங்கே யம் சாலை வேலன் ஹோட்டல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக இந்த மைதா னம் தூய்மைப்படுத்தப்பட்டு உள்ளது. புத்தக கண்காட்சி அரங்குகள் அமைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முன்னதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், சார் ஆட்சியர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்டோர் புத்தகத் திருவிழா மைதானத்தில் நடை பெற்று வரும் ஏற்பாடுகளை நேரில் பார்வை யிட்டுச் சென்றனர்.