districts

img

பணிகளை செய்வதில் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை திருப்பூர் 53ஆவது வார்டு சிபிஎம் கவுன்சிலர் குற்றச்சாட்டு

திருப்பூர், செப். 22 - திருப்பூர் மாநகராட்சி 53ஆவது வார்டில்  குப்பை அள்ளுவது, குடிநீர் விநியோகம் உள் ளிட்ட பல்வேறு பணிகளை நிறைவேற்றுவ தில் அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை  என்று இந்த வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஆர்.மணி மேகலை குற்றஞ்சாட்டியுள்ளார். திருப்பூர் மாநகராட்சியில் பல்லடம் சாலை தமிழ்நாடு தியேட்டரில் இருந்து கணப திபாளையம் பிரிவு டி.கே.டி. பஸ் நிறுத்தம்  வரை உள்ள நெடுஞ்சாலையை உள்ளடக்கி,  கருப்பகவுண்டம்பாளையம் சாலை, பாரதிந கர், வீரபாண்டி பிரிவு,  நொச்சிபாளையம் பிரிவு, தாய்நகர், திருவள்ளுவர் நகர், கெம்பே நகர், ஏ.பி.நகர், பாலாஜி நகர், செல்வி நகர்,  சபாபதிநகர், குப்பாண்டம்பாளையம், விக் னேஷ்வரா நகர், மூலக்கடை, சுண்டமேடு என  விரிந்து பரந்த பகுதிகளைக் கொண்டது 53 ஆவது வார்டு. ஏறத்தாழ 30 ஆயிரம் மக்கள்  வசிக்கும் இந்த வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆர்.மணிமேகலை  மாமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த வார்டில் குப்பை அகற்றுவது, கழி வுநீர் சாக்கடை தூய்மைப்படுத்துவது, குடிநீர்  விநியோகம், தெரு விளக்குகள் சரி செய்வது  என மாநகராட்சி மூலம் செய்ய வேண்டிய பணிகளைச் செய்வதில் அதிகாரிகள் ஒத்து ழைப்பு தருவதில்லை. குறிப்பாக குப்பை அள்ளும் பிரச்சனை யைப் பொறுத்தவரை கடந்த காலத்தில் நிரந்த ரப் பணியாளர்கள் 18 பேர், ஒப்பந்தப் பணியா ளர்கள் 20 பேர் என மொத்தம் 38 பேர் இந்த  வார்டில் தினமும் வீதிகளில் வீடுகளில் சேக ரமாகும் குப்பைகளை சேகரித்து அகற்றி வந் தனர். 

தமிழ்நாடு அரசு மாநகராட்சிகளில் திடக் கழிவு மேலாண்மைப் பணியை அவுட்சோர் சிங் என்று தனியார்மயம் செய்த பிறகு இந்த  வார்டில் குப்பை அகற்றும் பணி கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 38 பேர்  வேலை செய்த இப்பகுதியில் தற்போது நிரந் தரப் பணியாளர்கள் 18 பேர் தவிர முந்தைய ஒப்பந்தப் பணியாளர்கள் 20 பேருக்கு பதி லாக வெறும் ஏழெட்டு பேர் மட்டுமே குப்பை  அகற்ற வருகின்றனர். நிரந்தரப் பணியாளர் கள் கழிவுநீர் கால்வாய்களை தூய்மைப்ப டுத்தும் பணி செய்வதுடன், 10 பேர் பிரதான  நெடுஞ்சாலையில் தமிழ்நாடு தியேட்டர் முதல் டி.கே.டி. பஸ் நிறுத்தம் வரை தூய்மை  செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். அவுட் சோர்சிங் ஒப்பந்ததாரரிடம் வேலை செய்வ தில் ஏழு பேர் மட்டும் வார்டுகளில் குப்பை  அகற்ற வருகின்றனர். இதனால் அன்றாடம் நடைபெற்று வந்த குப்பை அகற்றும் பணி தற் போது இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரு  முறை மட்டுமே நடைபெறுகிறது. இதனால்  இந்த வார்டில் பல்வேறு பகுதிகளில் குப்பை  மலை தேங்கி நிற்கிறது. இது குறித்து சுகா தாரத் துறை அலுவலர்களிடம், மாநகராட்சி உயரதிகாரிகளிடம் கூறினாலும், உடனே கவ னிப்பதாக பதில் கூறுகின்றனர். ஆனால் எந்த  பணியும் நடைபெறுவதில்லை.

அதேபோல் குடிநீர் விநியோகத்தில் நான் கைந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வந்து  கொண்டிருந்தது. ஒரு மோட்டார் பழுதான தால் ஆறு நாட்கள் குடிநீர் விநியோகம் பாதிக் கப்பட்டது. அந்த மோட்டாரை சரி செய்து தரு வதற்கு தொடர்ந்து முயற்சித்து ஒரு வழியாக  அதை சரி செய்தனர். ஆனால் அதன் பிறகு  சுழற்சி முறையில் எட்டு, ஒன்பது நாட்களுக்கு  ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய் யப்படுகிறது. வீரபாண்டி பிரிவு பகுதியில் சாக்கடை அடைப்பு இருக்கிறது. அடைப்பை நீக்கி சாக் கடை கழிவுநீர் சீராக வெளியேறிச் செல்ல  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம்  கொடுத்தோம். ஆரம்பத்தில் இயந்திரம் மூலம் ஒரு முறை சுத்தம் செய்தனர். ஆனால்  இப்போது வரை கழிவுநீர் சாக்கடை அடைப்பு அப்படியே இருக்கிறது. ஆனால் வேலை  செய்து கழிவுநீர் வெளியேறிச் செல்கிறது, பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்டது என்று அதி காரிகள் பதில் அனுப்பியுள்ளனர். அதேபோல் குப்பாண்டம்பாளையம் சமு தாய நலக்கூடம் கட்டித்தர கேட்டு நான்கு  முறை மாநகராட்சி மேயரிடம் கடிதம் கொடுத் தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இப்படி  ஒவ்வொரு பிரச்சனைக்கும் மாநகராட்சி நிர் வாகத்துடன், அதிகாரிகளுடன் தொடர்ந்து பலமுறை வற்புறுத்தினாலும் நன்றாகப் பேசு கின்றனர். ஆனால் வேலை மட்டும் நடப்ப தில்லை. இதனால் வார்டு மக்களின் எதிர் பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்ய முடி யாமல் உள்ளது. திட்டமிட்டு 53ஆவது வார்டை மாநகராட்சி நிர்வாகம் புறக்கணிக் கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இதே நிலை  நீடித்தால் இந்த வார்டு மக்களைத் திரட்டி மாந கராட்சி நிர்வாகத்தை எதிர்த்துப் போராடு வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை  என்று ஆர்.மணிமேகலை கூறினார்.