districts

img

குளங்களுக்கு தண்ணீர் விட கோரிக்கை

உடுமலை, நவ.2- கிராமங்களில் உள்ள குளங்களுக்கு திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகளிலிருந்து தண்ணீர் திறத்து விட வேண் டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய தாலூகாக் களுக்குட்பட்ட கிராமங்களில் முக்கிய தொழிலாக விவசா யம் மற்றும் கால்நடை வளர்ப்பு என்பது உள்ளது. இவை  அதிகமான விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதர மாகவும் உள்ளது. இந்நிலையில், வரும் மாதங்களில் வெயி லின் தாக்கம் அதிமாக இருக்கும் என்ற நிலையில் தண்ணீரின் தேவை அதிமாக இருக்கும். எனவே, கிராமங்களில் உள்ள  அனைத்து குளம் மற்றும் குட்டைகளுக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். குளம் மற்றும் குட்டை களுக்கு தண்ணீர் இருந்தால், சுற்றுவட்டார பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதனால் ஆழ்குழாய்கள் மூலம் மக்கள் மற்றும் கால்நடைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி  செய்ய முடியும். குறிப்பாக, உடுமலை தாலூகா, ஆலாம் பாளையம் கிராமத்தில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் பூசாரி நாயக்கர் குளத்திற்கு திருமூர்த்தி அணையில் இருந்து முறையாக தர வேண்டிய தண்ணீரை திறந்து விடாமல் உள் ளது. இதனால் அந்த குளம் தற்போது வறண்டு காணப்படுவ தால், அப்பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கபட்டுள்ள னர். எனவே, திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகளில் இருந்து கிராமங்களில் உள்ள குளம், குட்டைகளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என அப்பகுதி விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.