districts

img

மீண்டெழுந்த ‘டைகர்’!

“லட்சக்கணக்கானோருக்கு வியப்பும், மகிழ்ச்சியும் அளித்தது. ஏனென்றால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாஸ்டர் போட்டியில் தனது 43-ஆவது வயதில் சாம்பியன் பெற்றதாகும்”.விளையாட்டு உலகில் கொஞ்ச மும் அலட்டிக் கொள்ளாமல் ஒரே வீச்சில் பந்தை குழியில் தள்ளுவதில் அவருக்கு நிகர் அவரே. சர்வதேச மாஸ்டர் தொடர், அமெரிக்க ஓபன்,அமெரிக்க சாம்பியன் என மிகமுக்கிய தொடர்களில் 15 சாம்பியன் பட்டங்களை வென்று அசத்திய அவருக்கு  மேலும் ஒரு பட்டத்தை வெல்ல 11 ஆண்டு காலமாகும்என்றும் அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். டைகர் கூட்ஸ் இந்தப் பெயரைக் கேட்டதும் நினைவுக்கு வருவது ‘கோல்ப்’ விளையாட்டாகும். இந்த விளையாட்டில் நீண்ட காலம் கோலோச்சி ஆதிக்கம் செலுத்தியவர் இவர். இந்தப் பெயரும் புகழும் அவருக்கு அவ்வளவு சுலபமாக கிடைத்து விடவில்லை.

1970-களில் கருப்பின மக்கள் கோல்ப் விளையாட அமெரிக்காவில் அனுமதி கிடையாது. மேலும் சொல்ல வேண்டுமென்றால் புகழ்பெற்ற அகஸ்டோ நேஷனல் தொடர்களில் 1990 வரைக்கும் கருப்பர்கள் பங்கேற்கமுடியாது. இத்தகைய பின்னணியில் தான் 1975ஆம் ஆண்டில் ஆசிய தாய்க்கும் ஆப்பிரிக்க-அமெரிக்கா வம்சாவளி தந்தைக்கும் பிறந்த டைகர் வூட்ஸ் கோல்ப் விளையாட் டில் கால்பதித்தார். தொழில் முறை வீரராக மாறுவதற்கு முன்பே 18 வயதில் உலக அளவில் மாஸ்டர் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் கருப்பர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். பிஜிஏ தொடரில் விளையாடிய முதல் கருப்பினத்தவர்.19 வயதிலேயே கோல்ப் விளை யாட்டின் உச்சத்தை அடைந்த டைகர் வூட்ஸ், பொருளாதாரத்திலும் உயர்ந்தார். மிக இளம் வயதில் ‘மாஸ்டர் பட்டம்’ வென்று உலக தரவரிசையில் வேக வேகமாக முன்னேறி ‘நம்பர் ஒன்’ இடத்தையும் பிடித்தார். விளையாட்டு உலகில் எந்த அளவுக்கு பெயரெடுத்தாரோ அதைவிட பல மடங்கு சொந்த வாழ்க்கையில் ‘சர்ச்சை’யில் சிக்கி சீரழிந்த அவர், நம்பர் ஒன் இடத்தை இழந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பார்முக்கு திரும்பிய டைகருக்கு அமெரிக்காவின் உயரிய விருது வழங்கப்பட்டது.

எதிர் நீச்சல்...
 

43 வயதாகும் டைகர், ஒரு காலத்தில் கோல்ப் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தினார். 2013 ஆம் ஆண்டில் தனது காதலி எலின் நார்டெக்ரனை கரம் பிடித்தார். மிக ஆடம்பரமாக கரீபியன் தீவில் நடந்தஇவர்களது திருமணம் விளையாட்டு உலகில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.  ஆனால், இந்த திருமண பந்தம்7 வருடத்தில் முறிந்தது. அதன் பிறகு,டைகருக்கு இறங்கு முகம்தான். சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள், குடிபோதைக்கு அடிமை,அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கியது, தண்டுவடத்தில் தொடர் அறுவை சிகிச்சை என பல்வேறு கார ணங்களால்  பெரியதாக பதக்கத்தை வெல்ல முடியாமல் அவதிப்பட்டார். 

நினைவலைகள்...

அமெரிக்காவின் சைப்ரஸ், கலிபோர்னியாவில் பிறந்த டைகர் கூட்ஸ். குழந்தை பருவத்திலேயே கோல்ப் மட்டையை கையில் பிடித்த வர். 11 வயதில் தந்தையோடு போட்டியிட்டு வெற்றி பெற்றதும் முதன் முதலாக மிகப்பெரிய தொடரில் 13 வயதில்தேசிய ஜூனியர் பட்டத்தை வென்ற தும் அவரது பெரும் சாதனையாகும்.  15 ஆவது வயதில் அமெரிக்க ஓபன் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி மாணவரான இவர், உயர் கல்வியில் பள்ளி அணிக்காக பதக்கம் வென்றதோடு படிப்பிலும் கெட்டிக்காரராக பல்கலைக் கழகத்தில் பட்ட மேற்படிப்பை முடித் தார்.அமெரிக்க ராணுவத்தில் லெப்டி னன்ட் பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்ற இவரது தந்தை ஏர்ல வூட்ஸ், மத்திய மேற்கு அமெரிக்காவின் கான்சாஸில் பிறந்தவர். பூர்வகுடி களான கருப்பு இன மக்கள் அதிகம் வசித்த அந்த கிராமத்தில் அரசுப் பள்ளியில் படித்து அந்த காலத்தி லேயே பட்டப் படிப்பை முடித்தவர்.  கல்லூரி கூடைப் பந்து அணியில் முதன் முதலாக விளையாடிய ஆப்பிரிக்க- அமெரிக்க வீரரும் ஆவார்.பார்பரா க்ரே என்ற கருப்பின பெண்ணை மணந்த ஏர்ல் வூட்ஸ் தம்பதிகளுக்கு ஏர்ல் ஜூனியர், கெவின், ராய்ஸ் என மூன்று குழந்தைகள். வியட்நாம் போரின் படைப் பிரிவில் பணியாற்றிய இவரை தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பி வைத்த னர். அப்போது, பாங்காங்கில் உள்ளஐக்கிய மாகாண ராணுவ அலு வலகத்தில் செயலாளராக பணியாற்றி குல்டிடா புன்சாவாட்டை கலப்பு மணம்செய்து கொண்டார். இவர்களின் ஒரே மகன்தான் டைகர் கூட்ஸ். 

உல்லாச வாழ்க்கை...
 

சிறு வயதிலேயே கோல்ப் விளையாட்டில் உச்சத்தை அடைந்து பொருளாதாரத்திலும் உயர்ந்து விளை யாட்டு உலகில் ‘பில்லியன் டாலர்’வீரர் என பெயர் பெற்றார். கோடிகோடியாய் சம்பாதித்த இவர்,  ஒருகண்காட்சி போட்டியில் விளை யாடுவதற்காக தில்லி  வந்தபோது அவருடன்  விளையாடிய பல விவிஐபிக்களும் அவரது நிபுணத்து வத்தை பார்த்து ரசித்தனர். இந்தபோட்டிக்காக ரூ.15 கோடி கொடுத்ததாகவும் கூறப்பட்டது.சொந்த வாழ்க்கையிலும், விளை யாட்டிலும் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட சர்ச்சை, சறுக்கலில் இருந்துமீண்டும் இயல்பு பாதைக்கு திரும்பியஅவர், முக்கிய தொடரான அகஸ்டா வில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் போட்டியில் தனது 15 ஆவது பட்டத்தை வென்றதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். அமெரிக்கா வின் வெள்ளை மாளிகை ரோஜா தோட்டத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் விருதும் கொடுத்தார்.  இந்த விழாவில் தனது தாயார், இரு குழந்தைகளுடன் டைகர் வூட்ஸ் கலந்து கொண்டார்.“என் அப்பா, அம்மாவை மிகவும் நேசிக்கிறேன். காரணம், எப்போதுமே விதைகளை விதைப்பார்கள். எதிலும்சாதிக்க வேண்டும் என்று ஊக்கப் படுத்துவார்கள். அவர்கள் கொடுத்த அந்த நம்பிக்கை விதைதான் இன்றைக்கு மீண்டும் விளையாட்டுப் பாதைக்கு திரும்ப அழைத்து வந்தது. இந்த வெற்றியை மிகவும் முக்கியமானதாக கருது கிறேன். எனக்குகோல்ப் எவ்வளவு முக்கியமானதுஎன்பதை என் குழந்தைகளும் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்”என்று டைகர் வூட்ஸ் பேசியது குறிப்பிடத்தக்கதாகும்.பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே அவர் சாதித்திருப்பது உடல் தகுதி மட்டுமல்ல. உடல் ரீதியாக வும், மன ரீதியாகவும் காயப்பட்டு இருந்தாலும் மீண்டும் விளையாட வேண்டும் என்ற எண்ணமும் அதற்கான முயற்சியும், இடைவிடாத பயிற்சியும்  எந்த அளவுக்கு இருக்கிற தோ அந்த அளவுக்கு சாதிக்க முடியும் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறார் டைகர்.  நம்மில் எத்தனை பேருக்கு இத்தகைய மன உறுதி இருக்கிறது?.