திருப்பூர், நவ. 21 - பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியா ளர் சங்கத்தினர் திருப்பூரில் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பூர் வீரபாண்டி ஆவின் முன்பு வியாழனன்று காலை இந்த ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே. கொளந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் பி.பெருமாள், தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.பால தண்டபாணி, பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.பரமசிவம், விவ சாயிகள் சங்க காங்கயம் பொறுப்பாளர் வேலுச்சாமி, பள்ளத்தோட்டம் ஈஸ்வரி உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதில், பால் கொள்முதல் விலையை லிட் டர் ஒன்றுக்கு ரூ.10 உயர்த்தி, பசும்பால் லிட்டர் 1-க்கு ரூ.45, எருமைப் பால் லிட்டர் 1-க்கு ரூ.54 என நிர்ணயம் செய்ய வேண்டும். ஆரம்ப சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். பாலின் தரத்தை 8.0 (கொழும்பு அல்லாத இதர சத் துக்கள்) மற்றும் 4.0 (கொழுப்புச்சத்து) என நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண் டும். கால்நடைகளுக்கான இன்சூரன்ஸ் திட் டத்தை அனைத்து கால்நடைகளுக்கும் செய்ய வேண்டும். கால்நடை மருத்துவர் கள் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு வந்து சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்த வேண் டும். பாலுக்கான ஊக்கத்தொகையை மற்ற மாநிலங்களில் வழங்குவதை போல் லிட்ட ருக்கு ரூபாய் ஐந்து வழங்க வேண்டும். நிலு வைத் தொகையை உடனே வழங்க வேண் டும். ஆவின் தீவன ஆலைகளை செயல்ப டுத்தி பால் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் கலப்பு தீவனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முழக் கங்களாக எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக திருப்பூர் ஆவின் மேலாளர் சுஜாதாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. முடிவில், பல்லடம் லோகநாதன் நன்றி தெரிவித்தார்.