உலகின் இரண்டாவது சுவை யான குடிநீரும், கோவை மாநகர மக்க ளின் தாகத்தைத் தீர்க்கும் நீருமாக இருப்பது தான் சிறுவாணி. ஆங்கி லேயர் ஆட்சிக்காலத்தில் கோவை மாவட்டத்தில் கடந்த 1929 ஆம் ஆண்டு கட்டப்பட்டது தான் சிறு வாணி அணை. கோவை மாவட்டம் பரந்து விரிந் திருப்பதற்கும், மாநகரம் தமிழ்நாட் டில் இரண்டாவது பெரிய மாநகராக மாக உருவெடுப்பதற்கும் அடித்த ளமே இந்த சிறுவாணி தண்ணீர் தான். கேரளம் அரசுக்கும், தமிழ்நாடு அரசுக் கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந் தத்தின் அடிப்படையில் தற்போது சிறு வாணி அணையிலிருந்து தமிழ்நாட் டிற்கு தண்ணீர் கிடைத்து வருகிறது. இந்த தண்ணீரை சிறுவாணி அணை யில் இருந்து எடுத்து தமிழக எல்லை யில் சிறுவாணி அடிவாரத்தில் சுத்தி கரிப்பு செய்கிறது பொதுப்பணித் துறை. பல்வேறு சுத்திகரிப்பு நிலைக் குப் பிறகு சிறுவாணி நீர் கோவை மாந கரின் ஒரு பகுதிக்கும் வழி நெடுகிலும் உள்ள கிராமங்களுக்கும் குடிநீர் விநி யோகம் செய்யப்பட்டு வருகிறது.
எந்த முறையில் சிறுவாணி நீர் சுத்திகரிக்கப்படுகிறது என்று பார்த் தால், சிறுவாணி அணையில் இருந்து குழாய் வழியாக உரிஞ்சி எடுக்கப்படும் நீர், அடுத்த 1.5 கிலோ மீட்டர்களுக்கு குழாய் வழியாகவே வருகிறது. மீதி யுள்ள 1.5 கிலோமீட்டருக்கு மலைப் பாதையில் வழிந்து வந்து சுத்திகரிப்பு நிலையத்தை அடைகிறது. சுத்திக ரிப்பு நிலையத்தில் ஒரு நாளைக்கு 7 கோடி லிட்டர் நீர் சுத்திகரிக்கப்படு கிறது. இந்த நீரை சுத்தப்படுத்த ஆலம் என்ற ரசாயன கட்டி பயன்படுத்தப்படு கிறது. ஒரு நாளைக்கு 20 கிலோ ஆலம் ரசாயன கட்டி பயன்படுத்தப்படுகிறது. இதனைத்தொடர்ந்து தண்ணீரில் குளோரின் கலக்கப்படுகிறது. ஆயிரம் லிட்டருக்கு ஒரு பிபிஎம் என்ற அடிப்படி யில் 7 கோடி லிட்டர் நீருக்கு 70 லிட்டர் லிட்டர் தண்ணீரில் கலக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ரேபிட் சேண்ட் என்ற பில்டரேசன் சென்டரில் சிறு வாணி நீர் சுத்திகரிக்கப்படு, கோவை மக்களை வந்தடைகிறது. எடுத்த எடுப்பிலேயே இந்த நீர் கோவை மக்களுக்கு கிடைத்துவிட வில்லை. சிறுவாணி நீர் கோவை மக் களை வந்தடைய நூற்றுக்கணக்கான குடிநீர் வடிகால்வாரிய தொழிலாளர் கள் தியாகங்களை செய்துள்ளனர். அடர் வனத்திற்குள், குடிநீர் குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் காட்டுயிர்களின் தாக் குதலில் பலியான வரலாறும் உண்டு. -எஸ்.கே.எம்.