districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி சாலை சீரமைக்கப்பட்டது

உடுமலை, டிச.5- உடுமலை சாலைகளில் உள்ள குழிகள் குறித்து தீக்க திர் நாளிதழ் செய்தி வெளியிட்டதையடுத்து நெடுஞ்சாலைத் துறையினர் குழிகளை சரி செய்துள்ளனர்.  உடுமலையில் இருந்து மூணார் செல்லும் சாலையில் போடிபட்டி முதல் அமராவதி வரை உள்ள சாலைகளில் குழி கள் உள்ளதால், அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இப்பகுதி களில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணி கள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், வேலைக்கும் செல் லும் தொழிலாளர்கள் உட்பட பலர் இதனால் அவதிக்குள்ளா கின்றனர். இதுகுறித்து கடந்த டிச.3 ஆம் தேதி தீக்கதிர் நாளி தழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து உட னடியாக நெடுஞ்சாலைத்துறையினர் குழிகளைச் சரி செய்து  உள்ளனர்.