districts

img

வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கி விட்டு இளைஞர்களை போதையில் ஆழ்த்தி வைத்துள்ளனர்

திருப்பூர்,  செப். 26 – நம் நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்கள்  வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக் கிவிட்டு இளைஞர்களை போதையில் ஆழ்த்தி வைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டி யுள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தின் போதை எதிர்ப்பு மாநாடு, போதைப்  பொருட்களை விநியோகம் செய்வோர் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  வலியுறுத்தி உள்ளது. திருப்பூரில் செவ்வாயன்று நடைபெற்ற இம்மாநாட்டில் நீலகிரி, கோவை, ஈரோடு,  சேலம், தருமபுரி மாவட்டச் செயலாளர்கள் எ. ஆர்.ஆதிரா, டி.சுதா, பி.லலிதா, எஸ்.எம். தேவி, ஆர்.மல்லிகா ஆகியோர் தீர்மா னங்களை முன்மொழிந்தனர்.  போதை எதிர்ப்பு தீர்மானம்:  நம் நாடு முழுவதும் இன்றைக்கு போதை  கலாச்சாரம் பெருகி வருகிறது. போதை கலாச்சாரம் சமூக ஒற்றுமை அமைதியை சீர்கு லைப்பதுடன், இளைஞர்களை, மாணவர் களை திசை திருப்பி அவர்களின் அறி வாற்றல், உடல் ஆரோக்கியத்தை பாதிக் கிறது. வீட்டில் ஆண்கள் போதைக்கு அடிமை யாவதால் பெண்கள் மீது வன்முறை அதிக மாகி உள்ளது. பொதுவெளியில் பெண்கள்  மீதான குற்ற செயல்களும் அதிகரித்துள் ளன. மாபியாக்கள் கையில் துறைமுகங்கள் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் போதைப் பொருட்கள் துறைமுகங்களின் மூலம் கடத்தப்படுகிறது. இன்றைக்கு போதை பொருட்களின் தலைநகரமாக குஜ ராத் மாநிலத்தின் அதானி கையிலுள்ள துறை முகம் மாறியுள்ளது.

துறைமுகங்கள் போதைப்பொருட்களை கடத்துவதற்கான மாபியா கும்பல்களின் கட்டுப்பாட்டில் உள் ளன. கடந்த இரண்டு வருடங்களில் மட்டும்  குஜராத் முத்ரா துறைமுகத்தின் மூலம் இரண் டரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பிடிபட்டுள்ளது. ஆனால் இதுவரை ஒரு வழக்குக்கூட பதியப் படவில்லை. நாடு முழுவதும் தனியார்மய மாக்கப்பட்டுள்ள துறைமுகங்கள், அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு மாபியாக்களின் கைகளில் உள்ளன. நமது மாணவர்களையும் இளைஞர்க ளையும் போதையில் ஆழ்ந்து இருக்கச் செய் துவிட்டு வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கிவிட்டு, பசி, பட்டினி என்று எதன்  மீதும் கேள்வி எழுப்பிவிடாமல் போதையி லேயே நம் இளைஞர்களை வைத்துள்ளது.  இங்கே தமிழகத்தில் இலக்கு வைத்து மது  விற்பனை அதிகரிக்கப்படுகிறது. இதை அரசு  கைவிட வேண்டும். டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட வேண்டும். நாடு முழுவதும்  போதை வஸ்துக்களை விநியோகி ப்பவர்களை கடும் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். போதை விழிப்புணர்வு மையங் களை அதிகமாக்க வேண்டும் என தீர்மானம்  முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதில், கோவை, திருப்பூர், ஈரோடு,  சேலம், தருமபுரி மற்றும் நீலகிரி மாவட்டங் களைச் சேர்ந்த மாதர் சங்க நிர்வாகிகள்  உட்பட திரளான பெண்கள் கலந்து கொண்ட னர். முன்னதாக, மாதர் சங்க வேலம்பாளை யம் நகரக்குழு சார்பில் அனுப்பர்பாளையத் தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அகில இந்திய  தலைவர் பி.கே.ஸ்ரீமதி மாதர் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்.