districts

img

அரசியல் அறுவடைக்கு வெறுப்பை கட்டமைக்கிறார்கள்!

பீட்டர் அல்போன்ஸ் வேதனை ஈரோடு, நவ.23-  அரசியல் ஆதாயத்திற்காக, 24 மணி நேரமும் ஒவ்வொருவரைப் பற்றி பொய் செய்திகளைப் பரப்பிக் கொண்டே கருத்தை கட்டமைக்கிறார்கள் என மாவீரன் திப்பு சுல் தான் பிறந்தநாள் கருத்தரங்கில் சா.பீட்டர்  அல்போன்ஸ் வேதனையை வெளிப்படுத் தினார். சத்தியமங்கலத்தில் மாவீரன் திப்பு சுல் தான் பிறந்தநாள் விழா கருத்தரங்கம், தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின், மாநில உதவித்தலைவர் ப.மாரிமுத்து தலை மையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய முன்னாள் மாநி லத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினருமான சா.பீட்டர் அல்போன்ஸ்  கலந்து கொண்டு பேசுகையில், மராட்டியத் தில் இருந்து, போன்ஸ்லே மன்னனின் தலை மையில் ஆயிரக்கணக்கான வீரர்கள் சிருங் கேரி மடத்தைக் கொள்ளையடிக்க சூழ்ந்து, 18  லட்சம் வராகன் பொன்னையும், தங்கத்தா லான சாரதாமணி அம்மையாருடைய திரு வுருவத்தையும் எடுத்துச் சென்றனர். அவர் கள் அனைவரும் இந்துக்கள்தான்.  அந்த மடத்தில் இருந்த சிருங்கேரி சங்க ராச்சாரியார் மடத்தை விட்டு காக்கர்லா என்கிற ஊருக்கு ஓடிப்போய் ஒழிந்து கொள் கிறார். பின்னர், அவர் திப்பு சுல்தானுக்கு எழு திய கடிதத்த்தில் “உங்கள் ஆகையிலுள்ள நாட்டில் நான் ஒரு ஆன்மீக குரு. 24 மணி நேர மும் தெய்வத்தை தொழுது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று இரவும், பொழுதும் ஜெபிக்கின்றவன். நான் ஒரு சாது. என் மடம் சாதுக்களை பராமரிக்கின்ற,  தர்மத்தை வளர்க்கின்ற மடம். மராட்டியத்தில் இருந்து வந்த கொடியவர்கள் மடத்தைக் கொள்ளையடித்து, இஷ்ட தெய்வத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த நாட்டில் நான் உயிரோடு இருக்க வேண்டுமா” என்று கண்ணீர் விட்டு கடிதம் எழுதினார். இதனைக்கண்ட திப்புசுல்தான் சங்கராச்சாரி யாருக்கு பதில் கடிதங்கள் எழுதி ஆறுதல் சொன்னார். அதில், “நீங்கள் எவ்வளவு பெரிய தர்மவான், சாது. ஆதிசங்கரர் வழி வந்தவரல்லவா நீங்கள். உங்கள் மனது துன் புற்றால் என் நாட்டில் பஞ்சம் வரும். ஆகவே நீங்கள் கண்ணீர் விடக்கூடாது, நான் இருக் கிறேன் உங்களைப் பாதுகாக்க” என்று சொல்லி அந்த மடத்திற்குத் தேவையான அத்தனையும் உடனடியாகச் செய்வதற்கு 3  லட்சம் வராகன் பொன்னை வழங்கிய மாமன் னர் திப்புசுல்தான்.  தில்லியில் இருக்கும் இந்தியா கேட்டில் இந்திய சுதந்திரத்திற்கு உயிர் நீத்தவர்கள் பெயர்களை எழுதி வைத்திருக்கிறார்கள். தூக்கு தண்டனையிலும், துப்பாக்கிச் சூட்டி லும் 94 ஆயிரம் பேர்கள் உயிர்த்தியாகம் செய்தவர்கள். இதில் 65 ஆயிரம் பேர் இஸ்லா மியர்கள். 24 ஆயிரம் பேர் இந்துக்கள். 8 ஆயி ரம் பேர் சீக்கியர்கள். கை, கால் இழந்தவர் கள், சொத்து, சுகம் இழந்தவர்கள், மனைவி, மக்களை இழந்தவர்கள், தேசாந்திரம் போய் தண்டனை பெற்றவர்கள் எல்லாம் வேறு. இப்படியெல்லாம் கனவுகண்டு தான் இந்த தேசத்தை உருவாக்கினோம்.  இன்று நாம் எப்படிப்பட்ட காலச் சூழலில் வாழ்கிறோம் என்று சொன்னால் மக்கள் மன தில் வெறுப்பு விதைகளைத் தூவிக் கொண்டே இருக்கிறார்கள். யார் எதற்காக வெறுக்கி றோம் என்று தெரியவில்லை. 24 மணி நேரமும் ஒவ்வொருவரைப் பற்றி பொய் செய்திக ளைப் பரப்பிக் கொண்டே இருக்கிறோம். வெறுப்புகளைத் தூண்டக்கூடிய செய்தி எங்கே போய் நிற்கிறது என்றால், கொலை  செய்யும் அளவிற்கு வெறுப்பை வளர்த் தெடுக்கின்றனர்.  இந்த நாட்டில் காந்தியடிகளை, இந்திரா காந்தியை, ராஜீவ் காந்தியைக் கொன்றது இஸ்லாமியரா, மருதுபாண்டியர்களை, கட்ட பொம்மனைக் காட்டிக் கொடுத்தது இஸ்லா மியர்களா? இந்த நாட்டின் தலைவர்களை யும், இந்த நாட்டிற்குப் பணி செய்த மாபெரும் தலைவர்களையும் வாழ்த்திக் கொண்டாடி யதுதான் இஸ்லாமியமே ஒழிய, இந்த தேசத் திற்கு ஊறு விளைவிக்கக் கூடிய எதையும் செய்யவில்லை. ஆனால் அப்படி ஒரு கருத் தைக் கட்டமைக்கிறார்கள். ஏன் கட்டமைக்கி றார்கள் என்று சொன்னால், அரசியல் அறு வடை செய்ய இதனைச்செய்கிறார்கள். இவர்களை அம்பலப்படுத்த வேண்டும்,  மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க வேண் டும் என்கிற முயற்சியில் சிறுபான்மை நலக் குழு இயங்கி வருகிறது. இஸ்லாமியர்கள் அல்லாத நண்பர்களை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன். அவர்களால் தான் இந்த  ஜனநாயகம் காப்பற்றப்பட வேண்டும். நல்லி ணக்கம் வளர்க்கப்பட வேண்டும். அவர்கள் மூலமாகத்தான் மத நல்லிணக்கம் உருவாக  வேண்டும். இந்த தேசத்தின் அடிப்படை கட்டு மானப் பணிகள் செழிக்க வேண்டும். அதன் மூலமாக சுதந்திர இந்தியா மலர வேண்டும். இதனைப் போற்றி பாதுகாப்பதற்கு இதைப் போன்ற விழாக்கள் அவசியம். ஆகவே தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவை மன தார பாராட்டுகிறேன், என்றார்.