தருமபுரி, ஜன.25- சர்வாதிகார எல்லைக்கு ஆர்எஸ்எஸ் நாட்டை வழி நடத்துவதாக இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் சனியன்று தரும புரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைவருக்கும் இலவச கல்வி கொடுக்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசு நீட் தேர்வை புகுத்தி, தனியார் பயிற்சி நிறுவ னங்கள் கொள்ளையடிப்பதற்கு வசதி ஏற்ப டுத்தி கொடுத்துள்ளது. இதனால் ஏழைகள், கிராமப்புற மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவாகிவிட்டது. மாணவர்களின் வங்கி கல்விக்கடனை தனியார் நிறுவன ஊழி யர்களை வைத்து மிரட்டி வசூல் செய்கின்ற னர். இதனால் மாணவர்கள் தற்கொலை செய் யும் நிலை உள்ளது. ஆனால், கார்ப்ரேட் நிறுவ னங்கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய் கின்றனர். ஒடுக்கபட்டவர்கள், ஏழைகள் கற்க கூடாது என்ற நோக்கத்தில் அப்போது ராஜாஜி குலக் கல்வி முறையை கொண்டு வந் தார். தற்போது அதே குலக்கல்வி முறையை தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் திணிக்கின்றனர். தற்போது யுஜிசி வெளி யிட்டுள்ள அறிவிக்கை என்பது, மாநில அர சுக்கு உள்ள அதிகாரங்களை குறைத்து, ஆர்எஸ்எஸ் கொள்கைகளை புகுத்தும் ஏற் பாடாகும். இது மிகவும் அபாயகரமானது. எனவே, கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வர வேண்டும். 8 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் கிடையாது. இதற்கு காரணம் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகா ரம் ஆளுநரிடம் உள்ளது. எனவே, துணை வேந்தர்களை மாநில முதல்வர்களே நியமிக் கும் அதிகாரம் வேண்டும். பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை யாரும் தனியாக முடிவு எடுக்க முடியாது. அனைத்தையும் முடிவு செய்யக்கூடியது ஆர்எஸ்எஸ் அமைப்பு தான். ஆர்எஸ்எஸ்-இன் அரசியல் பிரிவாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. அரசியல மைப்பு சட்டத்திற்கு ஒன்றிய அரசு செயல் படுகிறது. சர்வாதிகார எல்லைக்கு நாட்டை வழி நடத்துகின்றனர். இவ்வாறு அவர் தெரி வித்தார். முன்னதாக, இப்பேட்டியின்போது சிபிஐ மாநில துணைச்செயலாளர் நா.பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் சிவபுண்ணி யம், பழங்குடி மக்கள் சங்க மாநில கௌர வத் தலைவர் ந.நஞ்சப்பன், மாவட்டச் செய லாளர் எஸ்.கலைச்செல்வம், அனைத்திந் திய இளைஞர் பெருமன்ற மாநிலச் செயலா ளர் க.பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.