districts

img

“நான்கு நாட்களாக தண்ணீர் வரவில்லை” பேருந்தை சிறைபிடித்து மக்கள் மறியல்

தருமபுரி, மே 5- நல்லம்பள்ளி அருகே நான்கு  நாட்களாக தண்ணீர் வரவில்லை எனக்கூறி அப்பகுதி பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி ஒன்றியம், ஏர்ரபையன ஹள்ளி ஊராட்சியில் கெட்டு ஹள்ளி கிராமம் உள்ளது. இந்த  கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மக்கள் வசித்து வரு கின்றனர். இப்பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிவரும் ஆழ் துளை கிணறுகள் மற்றும் ஒகே னக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கடந்த நான்கு நாட் களாக குடிநீர் விநியோகிக்கப்பட வில்லை.  மேலும், குடிநீர் வரும் குழாய்களில் சில இடங்கள் உடைந் துள்ளன. அதனை அதிகாரிகள் சீர மைக்கவில்லை. இதுகுறித்து அப் பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதி காரிகளிடம் புகார் தெரிவித்தனர்.  ஆனால், இதுவரை எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், குடிநீர் தேவைக்கு அருகில் உள்ள கிராமப்பகுதிக்கு சென்று தண்ணீர் பிடித்து பயன் படுத்தி வந்தனர். இந்த குடிநீர் பிரச்ச னையால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், தொழிலா ளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆவேசமடைந்த அப் பகுதியைச் சேர்ந்த மக்கள் வெள்ளி யன்று கெட்டுஹள்ளியிலிருந்து தருமபுரி செல்லும் அரசு நகரப் பேருந்தை சிறைபிடித்து காலிக் குடங்களுடன் சாலை மறியலில்  ஈடுபட்டனர். இந்த மறியல் போராட் டத்தில் சுமார் 50க்கும் மேற்பட் டோர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த அதியமான்கோட்டை போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்றனர். அங்கு  மறியல் போராட்டம் நடத்திய  பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை  நடத்தினர். அப்போது, உங்கள்  பகுதிக்கு குடிநீர் கிடைக்க விரைந்து  நடவடிக்கை எடுப்பதாக உறுதிய ளிக்கப்பட்டது. இதையடுத்து  அனைவரும் கலைந்து சென்றனர்.