districts

img

மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு வைக்கக்கூடாது

கோவை, ஜன.25- தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு வைக்கக் கூடாது என கோவை நவ இந்தியா பகுதியில்  உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தினார். கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கோயம்புத்தூர் மெட் ரிக்குலேசன் பள்ளிகள் கல்விசார் குழு சார் பில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் மற் றும் பள்ளி முதல்வர்களுக்கு விருது வழங் கும் விழா சனியன்று நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச் சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் விருந்தினராக கலந்து  கொண்டு, விருதுகளை வழங்கினார். மேலும், கடந்தாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறக் கார ணமாக இருந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், பள்ளி முதல்வர்களுக்கு கேடயமும் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது, ஒவ் வொரு மனிதருக்கும் ஏணிப்படியாக ஒரு ஆசி ரியர் இருப்பார். ஆசிரியர் இல்லை என்றால்,  அங்கீகாரமே கிடைக்காது. பள்ளிக்கூடங்க ளுக்கு வெற்றுத்தாளாக வரும் மாணவர் களை, சமுதாயம் போற்றும் புத்தகமாக மாற் றுவது ஆசிரியர்கள் தான். ஆசிரியர் மாண வர் முன்பு நின்று பாடம் நடத்தும் உணர்வை வேறு எந்த டெக்னாலாஜியாலும் கொண்டு வர முடியாது. ஒன்றிய அரசே நம்மை பாராட் டுகிறது. பள்ளி இடைநிற்றல்கள் குறைவ தற்கு தனியார் பள்ளிகளும் காரணம். பல் வேறு விதமான பின்னணிகளில் இருந்து  மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகிறார்கள். அப்படி வரும் எல்லா பிள்ளைகளும் அறிவா ளியாக இருக்க முடியாது. நுழைவுத் தேர்வு  வைத்து மாணவர்களை தேர்வு செய்யாமல்,  எல்லா பிள்ளைகளையும் ஏற்றுக் கொண்டு தயார் செய்கின்றோம் என தனியார் பள்ளி கள் சொல்ல வேண்டும். அரசு மற்றும் தனியார்  பள்ளிகள் என இருவரும் சேர்ந்து அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவோம், என் றார்.