அவிநாசி, நவ.20 - அவிநாசி ஒன்றிய கிராமத்தில் இறந்தவர்களை மரியாதையாகப் புதைக்கக்கூட பாதையில்லாத நிலை யில், பட்டியலின மக்களின் மயா னத்துக்கு செல்ல சாலை வசதி செய்து தருமாறு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், ராமநாதபுரம் ஊராட் சிக்கு உட்பட்ட ராமநாதபுரம், தொட் டக்களம் புதூர் ஆகிய பகுதிகளில் சுமார் 150 ஆதிதிராவிடர் சமூக குடும் பங்கள் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதிகளில் இறந்தவர்களை அடக்கம் செய்ய தனி மயானம் உள்ளது. அதில் பல ஆண்டுகளாக உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றது. எனினும், இந்த மயா னத்திற்கு சரியான பாதை வசதி இல்லை. இம்மயானங்களுக்கு பிறரது நிலத்தைப் பாதையாகப் பயன்படுத்தி வருகின்றனர். மயானத்திற்கு செல்ல முறை யான பாதை இல்லாததால், பாதை வசதி கேட்டு, மாவட்ட ஆட்சியரிடம், இந்த ஊர்ப் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். இந்நிலையில், மேற்கண்ட ஊர் களின் ஊராட்சி மன்றத் தலைவரின் அழைப்பையேற்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், மயானங்கள் நேரில் ஆய்வு செய்யப்பட்டது. அப்பகுதி பொதுமக்களிடமும் கலந்துரையாடியதில், இரண்டு மயா னங்களுக்கும் முறையான பாதை வசதி ஏற்படுத்தித் தரவேண்டும்; தொட்டக்களம் புதூர் ஆதிதிராவிட மக்களுக்கு சமுதாய நலக்கூடம் அமைத்துத் தரவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இக்கோரிக்கைகளுக்கு, அரசு நிர்வாகத்தின் மூலம் தீர்வு காண உறுதி அளிக்கப்பட்டது. மக்களுடன் நடைபெற்ற கலந்து ரையாடல் கூட்டத்தில், ராமநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.பழனிச்சாமி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் சி.கே.கனகராஜ், அவிநாசி ஒன்றியப் பொறுப்பாளர் ஆர்.பழனிச் சாமி, மனித உரிமைக் காப்பாளர் வேணி ஆகியோர் பங்கேற்றனர்.