districts

img

மதுக்கடைகள் நடத்துவதில் கொள்கை உடன்பாடு இல்லை: அமைச்சர் முத்துசாமி பேட்டி

கோவை, நவ.10- டாஸ்மாக் மதுக்கடைகள் நடத்துவதில் கொள்கை உடன் பாடு இல்லை என்றாலும், சூழ்நிலை காரணமாக அனுமதிக்க  வேண்டியதாக உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித் தார். கோவை கொடிசியா அரங்கில் இரண்டாம் கட்டமாக கலை ஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் மகளிர்களுக்கு ரூபே  அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் முத்துச்சாமி, ஆட்சியர் கிராந்திகுமார்பாடி, மேயர்  கல்பனா, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிராபகரன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.  இதில் கலந்து கொண்ட அமைச்சர் முத்துசாமி, செய்தியா ளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு மது விற்பனையை  அதிகப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தீபாவ ளியின் போது பிரச்சனை ஏற்படாமல் இருக்க டாஸ்மாக் கடை யில் காவல்துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக் கப்பட உள்ளது. மதுபாட்டில் உடைவது போன்ற காரணங் களை கருத்தில் கொண்டு, 90 எம்.எல். டெட்ரா மது பாக்கெட்  திட்டங்கள் விரைவாக கொண்டு வரப்படும். அதனை உடனடி யாக அமல்படுத்த முடியவில்லை என்றார். மேலும், பாஜக  அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த அமைச் சர், ”வீடு வீடாக சென்று நாங்களா குடிக்க சொல்கிறோம்? குடிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம். டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட முடியாது. டாஸ்மாக் கடை களை நடத்துவதில் கொள்கை உடன்பாடு இல்லை என்றா லும், சில சூழ்நிலைகள் காரணமாக அனுமதிக்க வேண்டி யுள்ளது. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மதுக்கடை கள் இல்லையா? மதுக்கடைகளை நடத்த வேண்டும் என்பது  எங்கள் நோக்கம் அல்ல” எனப் பதிலளித்தார்.