ஈரோடு, மார்ச் 11 - அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக் கிற தைரியம் இல்லாமல், உணர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. முட்டாளாகச் சாவது வாழ்க்கை யில்லை. அறிவுப்பூர்வமான மாற்றத் ்திற்கு மனித இனம் தயராக வேண்டும் என ஆன்மீக பேச்சாளர் சுகி.சிவம் உரை யாற்றினார். ஈரோடு மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே தமிழர் களின் மரபையும், தமிழ் பெருமிதத் தையும் உணர்த்தும் வகையில் “மாபெரும் தமிழ்க் கனவு” என்ற பண் பாட்டு பரப்புரை நிகழ்வு அண்மையில் திண்டல், வேளாளர் மகளிர் கல்லூரி யில் நடைபெற்றது. நிகழ்விற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நாரணவ்ரே மனிஷ் ஷங்கர்ராவ் தலைமை ஏற்றார். இதில், “நேற்று இன்று நாளை” என்ற தலைப்பில் சுகி.சிவமும், “தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்” என்ற தலைப்பில் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கமும் உரை யாற்றினர். இந்நிகழ்வில் பங்கேற்று சுகி.சிவம் பேசுகையில், நம்மில் பலர், முட்டாள் தனமான நம்பிக்கையை கடைபிடிக்கி றார்கள். அறிவுப்பூர்வமான கண்டு பிடிப்புகளுக்கு மாற மறுக்கிறார்கள். காரணம் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதே. அறிவுக்கு முக்கியத் துவம் கொடுக்கிற தைரியம் உங்க ளுக்கு இல்லை. யாரோ சொல்லிக் கொடுப்பதை நம்புகிறீர்கள். நாமாக கண்டறிந்த உண்மைகளைப் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள். அறிவுப்பூர்வ மான மாற்றத்திற்கு மனித இனம் தயா ராக இருக்க வேண்டும், இல்லையென் றால் முன்னேற முடியாது. அமெரிக்கா, ஜப்பானில் இருக்கும் எத்தனையோ விதமான வசதிகள் எல்லாம் இந்த நாட்டில் வந்திருக்க வேண்டும். ஆனால் ஏன் வரவில்லை என்றால், நாம் அர்த்த மற்ற குப்பைகளை சுமந்து கொண்டு, உண்மையில் தெரிந்து கொள்ள வேண்டிய பலதை பின்பற்றாமல் விட்டுவிட்டோம்.
எனவே, அறிவுப்பூர்வமாக வாழ் வதற்குப் பழகுங்கள், வெறும் உணர்ச்சிப்பூர்வமாக இருப்பதை நிறுத் துங்கள். முட்டாளாகப் பிறந்து, முட்டா ளாக வளர்ந்து, முட்டாளாகச் சாவது வாழ்க்கையில்லை. ஏழையாக பிறந் தாலும் அறிவாளியாக, உலகம் சொல்லும்படியாக சாக வேண்டும் என்ற எண்ணம் மனதில் வேண்டும். உலக மொழிகளில் பணக்கார தமிழ் மொழி. பிற மொழிகள் அடுத்த மொழிகளை வழிமொழிந்த போது, தமிழ் புதிய சொற்களை உருவாக்கி வாழும் ஒற்றை மொழி நம் தமிழ் மொழி. இந்த மொழியில் பயிற்சி பெற்றால் மட்டும் தான் சிந்தனை திறன் வரும். எத்தனை மொழி படித்தாலும் அத்தனை மனிதன். ஆனால் தாய் மொழியில் சிந்திப்ப வன்தான் வேகமாக முன்னேற முடியும். புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்து வர்கள் தாய்மொழியில் பேசுபவர் களாக இருப்பார்கள். ஆகவே தாய் மொழியில் பற்று இருந்தால்தான் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும். நேர்மையுள்ள மனிதர்களை வைத்துக் கொண்டுதான் உலகில் உண்மையான நீதியை நிலைநாட்ட முடியும் என்றார்.
சொந்த கனவுகளையும் கூட்டாக காண்போம்
இந்நிகழ்வில் பங்கேற்று கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், மாபெரும் தமிழ் கனவு 100க்கும் மேற் பட்ட கல்லூரிகளில் விரிந்து கொண்டே இருக்கிறது. மாவட்டந்தோறும் புத்தக திருவிழாக்கள், இலக்கிய சங்கமங் கள் என்று தமிழுக்கு மறுமலர்ச்சியின் காலமாக விளங்குகிறது. மாபெரும் தமிழ் கனவு என்பதன் நோக்கம் என்ன? கல்வி இப்பொழுதுதான் பொதுவில் இருக்கிறது. இந்த நிலம் பலரிடம் அடி மைப்பட்டதுண்டு. ஆனால் இந்த நிலத்தில் வாழ்ந்தவர்கள் அடிமைபட்டு கிடந்தார்களே தவிர, தமிழ் ஒருபோதும் அடிமைப்பட்டதே இல்லை. தமிழ் பேசக்கூடாது எந்த காலத்திலாவது தடை செய்யப்பட்டதா? எத்தனையோ மதங்கள் சைவம் தழைத்தோங்கி யிருந்த போது அதனோடு சேர்ந்து தேவாரமாக, திருவாசகமாக மலர்ந்தது. வைணவத்தின் பொது நாலாயிர திவ்ய பிரபந்தமாக, ஆண்டாள் திருமொழி யாக வளர்ந்தது. சமணத்தின் போது சிலப்பதிகாரமாக, திருக்குறளாக இருந்தது. பவுத்தம் வந்த போது மணி மேகலையாக தமிழ் வளர்ந்தது. கிறிஸ் தவம் வந்தபோது தேம்பாவணியா கவும், இசுலாம் வந்த போது சீறாப் புராணமாக வளர்ந்த வரலாறு கொண்டது தமிழ். காக்கா கத்தினால் வீட்டிற்கு வரு வார்கள் என்ற சொல்வார்கள். தமிழ னின் வாழ்க்கை,வாழ்வியல் அனுபவம் தான் இந்த மொழி. கடலில் வாணி பத்திற்குச் செல்பவர்கள் திசை காட்டும் கருவிகளாக காக்கைக ளை கொண்டு செல்வார்களாம். திசை மாறிவிட்டால் அதனை திறந்து விடுவார் களாம். அந்த காக்கை கரை இருக்கும் திசையில் தான் பயணிக்குமாம். அந்த காக்கையின் வரவைப் பார்த்த தமிழர்கள் (வழி தவறிய) விருந்தினர் களுக்கு தேவையானவற்றை தயா ரித்து வைத்திருப்பார்களாம். அத் தகைய தொன்மையைக் கொண்டவர் கள் நாம். சொந்த கனவுகளை கூட்டாகக் காண்போம், கூட்டாக நிறைவேற்று வோம் என்றார். இதனைத்தொடர்ந்து, மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு சுகி.சிவம் மற்றும் மதுக்கூர் ராமலிங்கம் ஆகி யோர் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில், மண்டல இணை இயக்குநர் கலைச்செல்வி, உதவி இயக்குநர் மதுரா, தாளாளர் சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.