districts

img

மதுவிலக்கில் மாற்று கருத்து இல்லை

ஈரோடு, செப். 24- மதுவிலக்கை தமிழகத்தில் நடை முறைப்படுத்தும் விவகாரத்தில், திமுக விற்கு மாற்று கருத்து இல்லை என  அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்க ளிடம் தெரிவித்தார். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பெரும்பள்ளம் ஓடையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகாயத்தா மரை அகற்றும் பணியினை தொடக்கி வைத்தார்.  இந்நிகழ்வின்போது அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வரை 13 கிலோ மீட்டர் உள்ள பெரும்பள்ளம் ஓடை தூர் வாருவதற்காக ரூ.21 லட்சம் நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதற் கட்டமாக 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகி றது. அதேபோல இந்த ஓடையில் குப் பைகளை போடாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொள் ளப்பட்டுள்ளது. மதுவிலக்கைப் பொறுத்த வரை திமுகவிற்கு கொள்கை யளவில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் நடைமுறையில் ஒரே நாளில் செய்தால் என்ன ஆகும் என்பது அனை வருக்கும் தெரியும். ஆகவே படிப்படி யாக செய்வோம். ஏற்கனவே 500 கடை கள் மூடப்பட்டுள்ளது. நடைமுறையில் திடீரென ஒரே நாளில் செய்தால் மிகப் பெரிய பிரச்சனையை சந்திக்க வேண்டி  வரும். எனவே ஒவ்வொரு இடமாக  பேசி மூடுவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். கவுன்சிலிங் மூலம்  மதுப்பழக்கத்தை குறைப்பதற்கான நட வடிக்கையும் எடுத்து வருகிறோம். மத் திய அரசு மதுவிலக்கு கொண்டு வந் தால் அதை செய்வதற்கு நாங்கள் தயா ராக இருக்கிறோம் என்றார்.  இந்நிகழ்ச்சியில் ஈரோடு நாடா ளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் வே.செல்வராஜ், மாநக ராட்சி ஆணையாளர் மரு.மனீஷ், நீர் வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளர்  ஜெகதீசன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.