districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்புப் போராட்டம்

சேலம், ஆக.29- வீட்டுமனைப்பட்டா மற்றும் அடிப் படை வசதிகள் செய்துத்தர வேண் டும் என வலியுறுத்தி, ஆத்தூர் வரு வாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகாவிற்குட்பட்ட தெப்பம்பட்டி, செந்தாரப்பட்டி உள்ளிட்ட பகுதியில் வசித்து வருபவர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்.  துலுக்கனூர் பகுதி மயானம் செல் வதற்கு வசிஷ்ட நதியின் குறுக்கே பாலம் அமைத்துத்தர வேண்டும். தேசிய நெடுஞ்சாலை முதல் வசிஷ்ட நதி வரை உள்ள சாலையில் ஆக்கிர மிப்பை அகற்ற வேண்டும். ராம மூர்த்தி நகர் பகுதியில் தனியார் கோழிப்பண்ணையில் ஏற்படும் சுகா தார சீர்கேட்டிலிருந்து பொதுமக் களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித் தும், எந்தவித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் தாலுகாச் செய லாளர் ஏ.முருகேசன் தலைமையில் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வியாழனன்று காத்திருப்புப் போராட்டம் நடைபெற் றது. இதில் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் பி.செல்வசிங், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குண சேகரன், கெங்கவல்லி தாலுகாச் செயலாளர் டி.தமிழ்மணி மற்றும்  கெங்கவல்லி, ஆத்தூர் தாலுகாக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங் கேற்றனர். போராட்டத்தின் முடிவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வைத்த கோரிக்கையின் மீது உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என கோட்டாட் சியர், வட்டாட்சியர்கள் உத்தரவாதம் அளித்தனர்.