districts

img

வாலிபர் சங்க போராட்ட அறிவிப்பு எதிரொலி...

உதகை, ஆக. 23- கூடலூர் அருகே, பள்ளி செல்லும் பாதை குண்டும், குழியு மாக இருப்பதால் உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி வாலி பர் சங்கத்தினர் போராட்ட அறிவிப்பு வெளியிட்ட நிலையில்,  பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டது. நீலகிரி மாவட்டம் புளியம்பாறை கிராமத்தில் அரசு மேல் நிலைப்பள்ளிக்கு செல்லக்கூடிய சிதிலமடைந்துள்ள  சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்ற கோரிக் கையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பந்தலூர் ஏரியா  கமிட்டி முன்வைத்தது. மேலும், சாலை சீரமைக்கப்படா விட்டால் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட் டனர். இதுகுறித்து விரிவான செய்தி தீக்கதிர் நாளிதழி லும் வெளிவந்தது.  இந்நிலையில், வாலிபர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, தேவர் சோலை பேரூராட்சி, தற்காலி கமாக சாலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வாலிபர் சங்கத்தின் முன்னெடுப்பால் சிதிலமடைந்த சாலை சீரமைக்கப்படுவதை அறிந்த, மாண வர்கள் மற்றும் பொதுமக்கள் வாலிபர் சங்கத்திற்கு நன்றி  தெரிவித்தனர்.