districts

img

சுகாதார நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி வாலிபர் சங்கம் மறியல்

திருப்பூர், டிச.22- பாப்பம்பாளையம் அரசு துணை சுகாதார நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், பாப்பம்பாளை யம் அரசு துணை சுகாதார நிலையத்தை சீரமைக்க வேண் டும். செவிலியர் தங்கி பணிபுரிய வசதிகளை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பாப்பம்பாளையம் கிளை சார்பில் வியாழனன்று சாலை மறி யல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியலில் வாலிபர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சௌந்தர்யா, தாலுகா தலைவர் லெனின், செயலாளர் பாலமுரளி, பொருளாளர் விக்னேஷ், துணைத்செயலாளர் சரவணன், கிளை செயலாளர் சுகதேவ், முன்னாள் ஒன்றிய செயலாளர் கை.குழந்தைசாமி உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த  போராட்டத்தின் தொடர்ச்சியாக ஊராட்சி மன்றத் தலைவர் பி.எஸ்.செல்வி மற்றும் காவல் துறையினர் அங்கு வருகை தந்தனர். இதில் மருத்துவத் துறை அதிகாரிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதிய ளித்தனர். இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென் றனர்.