திருப்பூர், அக். 4 - இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மூவர்ண கொடி காத்து காவலர்களின் கொடிய தடியடித் தாக்குதலில் மண்டை பிளந்து உயிர் நீத்த தியாகி திருப்பூர் குமரனின் 120 ஆவது பிறந்த நாளான அக்டோபர் 4ஆம் தேதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னர். வாலிபர் சங்கத்தின் திருப்பூர் வடக்கு மாநகரக்குழு சார்பில் திருப்பூரில் தியாகி குமரன் நினைவகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாநகரக் குழுத் தலைவர் சே.கண்ணன், செயலாளர் எஸ். விவேக், மாநகரக் குழு உறுப்பினர்கள் ரமேஷ், அப்துல் ரஷீத், சந்துரு மற்றும் சாமுண்டிபுரம் கிளை மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல், தியாகி குமரன் நினைவகத்தில் அவரது உரு வச்சிலைக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். இந்நிகழ்வின்போது மாநகராட்சி மேயர் ந.தினேஷ் குமார், சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாநக ராட்சி ஆணையாளர் பவன்குமார், துணை மேயர் பாலசுப் பிரமணியம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். அத்துடன் தியாகி குமரன் குடும்ப வாரிசுகளையும் சிறப்பித்தனர்.