districts

img

பணிகள் நிறைவுபெற்று சாலை திறப்பு: மக்கள் மகிழ்ச்சி

அவிநாசி, ஜூலை 7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையான ராக்கியா பாளையம் பகுதியில் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி கள் நிறைவுபெற்று, மக்கள் பயன்பாட் டிற்கு வந்தன. திருப்பூர் மாவட்டம், திருமுருகன் பூண்டி நகராட்சி, 17 ஆவது வார்டுக்குட் பட்ட ராக்கியாபாளையம் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத் தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சாக் கடை மற்றும் சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த னர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சாலை விரி வாக்கத்திற்காகவும், சாக்கடை கால் வாய் அமைப்பதற்காகவும் அப்பகுதி பொதுமக்கள் இடத்தை தானமாக கொடுக்க முன் வந்தனர்.  இதையடுத்து திருமுருகன்பூண்டி நகராட்சி நிர்வாகம், நிதி ஒதுக்கீடு செய்து சாக்கடை மற்றும் சாலை வசதி பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலை யில், அதற்கானப் பணிகள் நிறைவ டைந்த நிலையில், நகர்மன்றத் தலைவர் ந.குமார், மக்கள் பயன்பாட்டிற்காக சாலையை திறந்து வைத்தார். இந்நி கழ்வில், சிபிஎம் கிளைச் செயலாளர், நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.