திருப்பூர், ஜன.3 - தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப் பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் 21 ஆவது திருப் பூர் புத்தகத் திருவிழா காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல் மைதானத்தில் ஜனவரி 23 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த புத்தகத் திருவிழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணி கள் விரைவாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதி யாக, புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ள அரங்கத்திற் கான பந்தல் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி யது. திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம் பந் தல் கால் நட்டு, புத்தகக் கண்காட்சி அரங்கிற்கான பந்தல் அமைக்கும் வேலையை தொடக்கி வைத்தார். உடன் பின்னல் புக் டிரஸ்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.