districts

img

உதகை: மலர் கண்காட்சிக்கான பணிகள் தீவிரம்

உதகை, ஜன.2- உதகையில் உள்ள கர் நாடகா அரசுக்கு சொந்த மான தோட்டக்கலைத் துறை பூங்காவில், விரை வில் மலர் கண்காட்சி நடக்க உள்ளதால், அதற் கான ஏற்பாடுகள் தீவிர மாக நடைபெற்று வருகி றது. மலைகளின் அரசி என  வர்ணிக்கப்படும் உதகைக்கு  தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும்  இந்தியாவின் பிற மாநிலங்கள், வெளிநாடு களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதி களவில் வருகின்றனர். ஒவ்வொரு  ஆண்டும் 30 லட்சத்துக்கு அதிகமான சுற்று லாப் பயணிகள் உதகைக்கு வந்து செல்கின்ற னர். சுற்றுலாப் பயணிகளை கவர உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் உள்ளன. இதேபோல் உதகையில் கர் நாடகா அரசு தோட்டக்கலை துறைக்கு  சொந்தமான பூங்காவும் உள்ளது. 38  ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து  காணப்படும் கர்நாடகா தோட்டக் கலைத் தோட்டம், ரோஜா தோட்டம், இத்தாலியத் தோட்டம், தேயிலைத் தோட்டம், பிரமைத் தோட்டம் என பல் வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள் ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணி கள், தொங்கு பாலத்தில் நடந்து சென்று  ‘செல்பி’ எடுத்து மகிழ்கின்றனர். பூங்கா  நடுவே அமைக்கப்பட்ட கட்டமைப்பு வளையத்தில் பள்ளி குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள் விளையாடும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதால் பூங் காவுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், சுற்றுலாப் பயணி களை கவர்வதற்காக தமிழக தோட்டக் கலை துறை பூங்காக்களில் மலர் கண் காட்சி நடத்தப்படுவதை போல், இந்த பூங்காவிலும் இந்த ஆண்டு முதல் முறையாக குளிர்கால மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து கர்நாடக தோட்டக்கலை துறை யினர் கூறுகையில், புகைப்படக் கலை ஞர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்க ளுக்கு ஒரு சிறந்த மற்றும் மகிழ்ச்சித ரும் இடமாக இப்பூங்கா உள்ளது. மலைப்பகுதிக்குள் உள்ள 2 ஆவது  பெரிய பூங்காவாக இது கருதப்படுகி றது. இங்கு சுற்றுலாப் பயணிகளை கவ ரும் வகையில், ‘ஆர்கிட், சைக்ளோ மன், ரெனன் குலஸ், டியூபெரஸ், பிகோ னியா, கிரைசாந்திமம், மேரிகோல்டு,’ உள்ளிட்ட 200 ரகங்களில், 5 லட்சம் மலர் கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. பசுமை குடிலில், 20 ஆயிரம் பூந் தொட்டிகள் தயார் செய்யப்பட்டு உள் ளன. இங்கு கட்டணமாக சுற்றுலாப் பயணி ஒருவருக்கு ரூ.100 வசூலிக் கப்படுகிறது. தமிழக மற்றும் கர்நாடக முதலமைச்சர்கள் இணைந்து கண் காட்சியை தொடங்கி வைக்க, அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு சில நாட்களில் கண்காட்சி தொடங்கும், என்றனர்.