districts

img

சேறும், சகதியுமான சாலையால் அவதி நாற்று நட்டு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்

தருமபுரி, அக்.12- தருமபுரியில் சேறும், சகதியுமான சாலையை சீரமைத்து  தர வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி பெண்கள் நாற்று  நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், நூலஅள்ளியிலிருந்து உழவன் கொட்டை செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழி யுமாக உள்ளது. கடந்த சில தினங்களாக பெய்த மழையால் ஆங்காங்கே சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியுள் ளது. இதனால் சாலை சேறும், சகதியமாக மாறியுள்ளது. தினந்தோறும் இச்சாலை வழியே செல்பவர்கள் பெரும் சிரமத் துக்குள்ளாகி வருகின்றனர். அவ்வப்போது சாலையில் வழுக்கி விழுந்து விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, பழுதான சாலையை சீரமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி பலமுறை மாவட்ட ஆட்சியரிடமும், தமிழக முதல்வருக்கும் கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பெண்கள் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.