கோவை, மார்ச் 13- அவினாசி மேம்பாலத்தின் கீழ் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீர் செய்த பெண்ணுக்கு பாராட்டு குவிந்து வரு கிறது. கோவை, அவினாசி மேம்பாலம் கோவையின் முக்கிய மான மேம்பாலமாகும். இந்த மேம்பாலமானது மரக்கடை, அவிநாசி சாலை, கூட் செட் சாலை ஆகிய முக்கிய சாலை களை இணைக்கிறது. முக்கிய சாலைகளை இணைப்ப தால் இந்த மேம்பாலத்தில் வாகன நெரிசல் எப்போதும் காணப் படுவது வழக்கம். பொதுவாக இந்த மேம்பாலத்தின் மேலே போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபட்டு போக்குவரத்து நெரிசலை சரி செய்கின்றனர். ஆனால், மேம்பாலத்திற்கு கீழ் பகுதி யில் போக்குவரத்து காவலர்கள் இல்லாததால் பல்வேறு சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டி கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் மேம்பாலத்திற்கு அடியில் வாகன நெரிசல் ஏற்பட்ட நிலையில், அவ்வழியாக இருசக்கர வாகனத் தில் சென்ற பெண் ஒருவர், இறங்கி சென்று அந்த போக்கு வரத்து நெரிசலை சரி செய்தார். இதனை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து பகிர்ந்துள்ளார். தற்பொழுது அந்த காட்சிகள் வைர லாகி அப்பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின் றன. இந்த பாலத்தில் மேலே போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபடுவது போல் மேம்பாலத்திற்கு கீழும் காவ லர்களை பணியமர்த்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம், நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டி கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.