மேட்டுப்பாளையம், டிச.30- ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகளை வனத்திற்குள் விரட்ட முயன்ற வனத்துறையினரை. சோலார் மின் வேலியை உடைத்து கொண்டு வந்து யானைகள் விரட்டியதால், வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். மேட்டுப்பாளையம் அடுத்துள்ள நெல்லிமலை வனப்ப குதியில் இருந்து திங்களன்று காலை வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் வனத்தை ஒட்டியுள்ள குரும்பனூர், ஆயர் பாடி, மங்கலக்கரைபுதூர் என மூன்று கிராமங்களுக்குள் அடுத்தடுத்து நுழைந்து அங்குள்ளோரை அச்சத்தில் ஆழ்த் தியது. குடியிருப்பு பகுதி, கிராம சாலை மற்றும் விளை நிலங்கள் வழியே உலா வந்த யானைகளை மீண்டும் காட்டு பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் எடுத்த முயற்சிகள் பலன லிக்காமல் யானைகள் அங்கும் இங்கும் ஓடியாடி போக்கு காட்டியது. இதனிடையே யானைகளை பார்க்க உள்ளூர் மக்கள் ஆங்காங்கே திரண்டதால் வனத்துறையினரின் முயற் சியில் கடும் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து வனத்துறை யினர் குரும்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டினுள் செல்ல ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டனர். இதன் பின்னர் வனத்துறையினர் யானைகளை சுற்றி வளைத்து அருகில் உள்ள நெல்லிமலை வனப்பகுதிக்குள் விரட்ட தீவிரம் காட்டி னர். நெல்லிமலை அடிவாரத்தில் உள்ள குரும்பனூர் கிராமத் தினுள் நுழைந்த யானைகள் அங்குள்ள விவசாய தோட்டத் திற்குள் புகுந்தது. பின்னர் தோட்டத்தை சுற்றி போடப்பட்டிருந்த சோலார் மின் வேலியை உடைத்து கொண்டு வெளியேறியது. அப் போது யானைகளை விரட்ட முயன்ற வனத்துறையினரை நோக்கி ஆவேசமாக திரும்பிய இரண்டு யானைகளும் அவர் களை துரத்தி கொண்டு வந்தது. இதனால் வனத்துறை பணியாளர்கள் பின்வாங்கி ஓடிய நிலையில் யானைகள் அருகில் இருந்த நெல்லிமலை காட்டுக் குள் சென்றது. யானைகள் விரட்டும் ஆபத்துள்ளதாகவும் பாதுகாப்பாக இருக்குமாறும் அப்பகுதி மக்களுக்கு எச் சரிக்கை அறிவிப்பு வெளியிட்ட வனத்துறையினரை யானை கள் விரட்டியது. சுமார் ஐந்து மணிநேர போராட்டத்திற்கு பின் னர் யானைகள் வனத்திற்குள் திரும்பியது குறிப்பிடத்தக் கது.