உடுமலை, டிச. 20- அமராவதி அணையின் நீர்பி டிப்பு பகுதிகளில் கடந்த வாரம் முதல் மழை பெய்வதால் அணை யின் நீர்மட்டம் வேகமாக உயர்கி றது. இதனால் ஆற்றின் கரையோ ரப் பகுதிகளில் உள்ள பொதுமக் கள் எச்சரிக்கையாக இருக்கு படி பொது பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை யில் உள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய ஆயக் கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு என சுமார் 54,634 ஏக்கர் விவசாய நிலங்களும் ஆயிரக்கணக்கான கிரமாங்களுக்கு குடிநீர் ஆதார மாக விளங்குகிறது. இந்நிலை யில், அமராவதி அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வரு கிறது. அணையின் மொத்த கொள் ளவு 90 அடி தற்பெழுது 87.70 அடி யாக உள்ளது. அணைக்கு நீர்வ ரத்து வினாடிக்கு 2594 கனஅடி நீர் வருகிறது. மேலும், அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ச்சி யாக மழை பெய்து வருவதால் அணையில் இருந்து உபரிநீர் ஆற்றில் திறந்துவிடப்படும் என்ப தால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவிக்கை யில், அமராவதி அணைக்கு வரும் தண்ணீரை தொடர்ந்து கண்கா ணித்து வருகிறோம். அணையின் நீர் மட்டம் 89 அடிக்கு வரும்போது அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியோற்றப்படும் என் றார். இந்நிலையில், அணையின் நீர் மட்டம் மளமளவென உயர்ந்து வரு கிறது. தற்போது அணையின் நீர் மட்டம் 88 அடியை நெருங்கியுள் ளதால், அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றும் முனைப்பில் அதிகாரிகள் உள்ள தாக தெரிகிறது.