districts

50 அடியில் கிடைத்த நீர் 500 அடிக்கு சென்றுள்ளது

கருத்தரங்கில் அதிர்ச்சி தகவல் தருமபுரி, ஆக.29- தருமபுரி மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டு களில் காலநிலையில் பெரும் மாற்றம் ஏற் பட்டுள்ளது. பருவமழை பொய்த்ததால், 50  அடியில் கிடைத்த நிலத்தடி நீர்மட்டம், படு பாதாளத்திற்கு சென்றுள்ளதாக கருத்தரங் கில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள் ளது.  தருமபுரி ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட் டரங்கில், சுற்றுச்சூழல் துறை சார்பில், தமிழ் நாடு காலநிலை மாற்றம் மற்றும் மாவட்ட அள விலான காலநிலை மாற்றம் குறித்த கருத் தரங்கம், தமிழ்நாட்டில் முதன்முறையாக நடைபெற்றது. ஆட்சியர் கி.சாந்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக் கத்தின் தலைமை இயக்குநர் தீபக் எஸ். பில்ஜி, மாவட்ட வன அலுவலர் அப்பல நாயுடு முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில், அண்ணா பல்கலைக்கழக காலநிலை மாற் றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் பேராசிரியர் பழனிவேலு, பூவுலகின் நண்பர் கள் அமைப்பின் வெற்றிசெல்வன், பாப்பாரப் பட்டி வேளாண் அறிவியல் நிலைய பேராசிரி யர் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இக்கருத்தரங்கில், தமிழ்நாட்டு மக்க ளுக்கு நிலையான மற்றும் காலநிலையை எதிர்க்கும் எதிர்காலத்தை உருவாக்க, தமிழ்நாட்டை காலநிலை ஸ்மார்ட் மாநிலமாக மாற்ற வேண்டும் என்பது தமிழ்நாடு கால நிலை மாற்றம் பணியின் இலக்காகும். விலை மதிப்பற்ற சதுப்பு நிலங்களை மீட்டெடுப்ப தற்கான தமிழ்நாடு சதுப்பு நில இயக்கம்,

பசு மையான எதிர்காலத்தை உறுதி செய்வதற் கான பசுமைத் தமிழ்நாடு மிஷன், தமிழ்நாடு காலநிலை ஆகிய மூன்று முக்கிய பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டத் தில் கடந்த 20 ஆண்டுகளாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜூலை  மாதம் 207 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நடப்பாண்டு ஜூலையில் 62 மில்லி மீட்டர் தான் மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்ட நிலத்தடி நீரில் புளோ ரைடு அதிகமாக படிந்துள்ளது. இதனை  பயன்படுத்தினால் பல், எலும்பு உள்ளிட்ட வைகள் புளூரோசிஸ் நோயால் பாதிக்கப் படும். தற்போது, ஒகேனக்கல் கூட்டு குடிநீரை பயன்படுத்துவதால், இந்த பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டுள்ளனர். அதாவது, ஒகேனக் கல் கூட்டு குடிநீர் பயன்படுத்தும் மக்கள் மட் டுமே மீண்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுக்கு முன்பு, தருமபுரி மாவட்டத்தில் 50 முதல் 200 அடிக்குள் நிலத்தடி நீர் கிடைத்தது. தற்போது, ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுவிட்டது. நிலத் தடி நீரை பாதுகாக்க நீர் மேலாண்மை, மண் மேலாண்மை ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும், என கருத்தாளர்கள் தெரிவித்த னர். இதைத்தொடர்ந்து இக்கருத்தரங்கில், முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத் திற்கு பொறுப்பு அலுவலராக திருமலைவா சன் நியமிக்கப்பட்டதற்கான ஆணையை, ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார். இதில் தமிழ் நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் உதவி இயக்குநர் மனிஷ் மீனா, தமிழ்நாடு ஈர நிலப்பணி இயக்க உதவி இயக்குநர் திரட்டி பல்லி தருண் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.