ஈரோடு, ஆக. 28- தாளவாடியில் நடைபெற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தினரின் காத்தி ருக்கும் போராட்டம் வெற்றி பெற் றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 மணி நேர வேலை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மாதாந்திர உதவித் தொகை இடைநிற்றலின்றி தொடர்ந்து வழங்க வேண்டும். உத வித் தொகை பெற ஏடிஎம் அட்டை வழங்க வேண்டும். குடும்ப அட் டையுடைய மாற்றுத்திறனாளிக ளுக்கு 35 கிலோ அரிசி வழங்கும் ஏஏஒய் அட்டையாக மாற்றி வழங்க வேண்டும். தாளவாடியில் ஒரே நக ரப்பேருந்து மட்டும் இயக்கப்படுவ தால் புறநகர்ப் பேருந்துகளில் இல வச பயணத்தை அனுமதிக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாளவாடியில் புத னன்று அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தி னர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு வட்டத் தலைவர் பி.ராயப்பன் தலைமை வகித்தார். அகில இந் திய செயல் தலைவர் நம்புராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார். முற்பகலில் போராட்டம் தொடங்கிய நிலையில், வருவாய் வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்த னர். இதுகுறித்து நம்புராஜன் கூறி யதாவது, வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், சமூக பாது காப்பு திட்ட வட்டாட்சியர், மாற்றுத் திறனாளிகள் துறை அலுவலர், போக்குவரத்துத்துறை மற்றும் வங்கி அதிகாரிகள் ஆகியோ ருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி நடைபெற்ற பேச்சு வார்த்தையில், அடையாள சான்று, உபகரணங்கள், போக்குவரத்து பயண அட்டை, ஓட்டுநர் உரிமம், முதலமைச்சரின் மருத்துவக்காப் பீடு ஆகியவை பெற சிறப்பு முகாம் நடத்துவது என ஏற்றுக் கொள்ளப் பட்டது. 100 நாள் வேலைக்கு புதி தாக விண்ணப்பிப்போருக்கு வேலையும், முழு ஊதியமும் தரு வதாகக் கூறப்பட்டது. பேருந்தில் கட்டணமில்லா பயணத்திற்கு போக்குவரத்துத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழு துவதாக வட்டாட்சியர் தெரிவித் தார். முன்னதாக நடைபெற்ற காத்தி ருப்பு போராட்டத்திற்கு, காசிபா ளையம் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் கே. துரைராஜ், சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.சாவித்திரி, பொறுப்புச் செயலாளர் ப.மாரி முத்து, பொருளாளர் வி.ராஜு, துணைத் தலைவர் ரேணுகா, முன் னாள் மாவட்டச் செயலாளர் சுப்பிர மணியம், ஏ.பி.ராஜு, குப்புத்தாயம் மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோரிக்கைகள் ஏற் றுக் கொள்ளப்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப் பட்டது.