districts

img

விசைத்தறி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம், மே 16- கூலி உயர்வு ஒப்பந்தத்தை மே 21 ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் பள்ளிபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் விசைத்தறி தொழி லில் பணிபுரியும் அனைத்து பிரிவு ஆண், பெண் தொழிலாளர்களுக்கும் 75 சதவிகித கூலி உயர்வு வழங்க வேண்டும். மேலும், மே  21 ஆம் தேதிக்குள் கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி விசைத்தறி தொழிலா ளர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பள்ளிபாளையம் அருகே உள்ள காவேரி ஆர்.எஸ் பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விசைத்தறி தொழிலாளர் சங்க ஒன்றிய உத விச்செயலாளர் கே.குமார் தலைமை வகித் தார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.அசோ கன், மாவட்ட தலைவர் கே.மோகன், பள்ளி பாளையம் ஒன்றிய செயலாளர் எஸ்.முத்துக் குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியு றுத்தி சிறப்புரை ஆற்றினர். இதில் ஒன்றிய தலைவர் அசன், ஒன்றிய பொருளாளர் முரு கேசன் உட்பட ஏராளமான விசைத்தறி தொழி லாளர்கள் கலந்து கொண்டனர்.