districts

img

மூலனூர் அருகே கரித்தொட்டி ஆலை அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

திருப்பூர், ஜன.20 - திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம், மூலனூர் ஊராட்சி ஒன்றியம்,  கிளாங்குண்டல் கிராமம், வலையக் காரன் வலசு கிராமத்தில் கரித் தொட்டி ஆலை அமைக்க ஏற்பாடு கள் நடைபெற்று வருகின்றன. இத னால் விவசாயமும், சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படும் என்று கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரி வித்துள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் திங்களன்று மாவட்ட ஆட் சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கிளாங்குண்டல் கிராம மக் கள் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது, தாராபுரம் வட்டம், மூலனூர் ஊராட்சி ஒன்றியம், கிளாங்குண்டல் கிராமம், வலையக்காரன் வலசு என் னும் ஊரில் சர்வே எண். 812, 824/3,  825/2-ல் 17 ஏக்கர் நிலத்தில் மிகப்பெ ரிய அளவில் தேங்காய் தொட்டி  எரித்து கறி தயாரிக்கும் தொழிற் சாலை அமைக்க ஏ.வி.ஐ.எம். கிரீன் வெண்ட்ர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் நிலத்தை வாங்கி அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடு பட்டு வருகிறது. அடிப்படை கட்ட மைப்புகளை உருவாக்கி வருகிறது.  இந்த தொழிற்சாலை வந்தால் கிளாங் குண்டல் மற்றும் குமாரபாளையம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த சுமார்  2000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படும்.  மேலும், புற்கள், தாவரங்கள் அனைத் தும் கறித் துகள்கள் படிந்து கால்நடை கள் மேய்ச்சல் பாதிக்கப்படும். நிலத் தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு கிணற்று  நீர் கருமை நிறமாக மாறும். இப்பகுதி  மக்களுக்கு மூச்சுத்திணறல் உள் ளிட்ட பல்வேறு நோய்கள் உண்டா கும். எனவே அரசு இந்த நிறுவனத் திற்கு அனுமதி வழங்கக்கூடாது என  குறிப்பிட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு வாழ்வா தாரம் இல்லையென்று கருதி 8 வெளி  ஆட்டோகளுக்கு பல்லடம் பேருந்து  நிலையத்திற்குள் அனுமதி அளிக்கப் பட்டது. அதை உரிமையாளர்கள் மட் டுமே இயக்க வேண்டும் என நிபந் தனை விதிக்கப்பட்டது. இந்நிலை யில் தற்போது நிபந்தனையை மீறி ஓட்டுநர்கள் போட்டு ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக வெளியில் இருந்து ஆட்டோ இயக் கும் ஓட்டுநர்கள் மற்றும் பேருந்து  நிலையத்தில் ஆட்டோ இயக்கும்  உரிமையாளர்கள் இடையே வட்டாட் சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உரிய தீர்வு  கிடைக்கவில்லை. எனவே மாவட்ட  ஆட்சியர் தலையிட்டு இப்பிரச்ச னைக்கு உரிய தீர்வு காண வேண்டும்  என வெளியில் இருந்து ஆட்டோ இயக்கும் ஓட்டுநர்கள் மனு அளித் தனர்.  அதேபோல் காங்கேயம் தாலுகா  படியூர் பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு 33 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. தற் போது அவர்கள் செட் அமைத்து குடி யிருக்கின்றனர். எனவே அரசு இலவச மாக வீடு கட்டி தர வேண்டும் என பய னாளிகள் மனு அளித்தனர். வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம்  மோசடி செய்தவர்கள் மீது நட வடிக்கை எடுக்காமல் காவல்துறை யினர் காலம் தாழ்த்தி வருவதாக கூறி  பல்லடம் தாலுகா காமராஜ் நகரை  சேர்ந்த சூரிய நாராயணன் என்பவர்  மனு அளித்தார். இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர்  (மகளிர் திட்டம்) சாம் சாந்தகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர்கள் (பொது) மகாராஜ் உள் ளிட்ட அனைத்து அரசு துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்ட னர்.