கோபி, அக்.28- நீட் தேர்வு என்ற பெயரில் தமிழக மருத்துவ கல்லூரி இடங்களை ஒன்றிய அரசு அபகரிக்கிறது என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி, கோபிசெட்டிபாளை யத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், கோபி கலை அறிவியல் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடங் களை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி, கோவை கேஎம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் நல்ல பழனிசாமி, பிஎஸ்ஜி மருத்துவ மனையின் இயக்குநர் புவனேஸ் வரன் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் அமைச்சர் சு. முத்துசாமி பேசுகையில், நீட் தேர்வு பற்றி பேசுவது அரசியல் அல்ல, தமிழ கத்தில் அதிகளவில் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசிற்கு 15 சதவிகிதம் நீட் தேர்வு என்ற அடிப்படையில் மருத்துவ இடங்கள் அபகரிக்கப் படுகிறது. இது எதிர்காலத்தில் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்க வேண்டி யுள்ளது. தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சிறந்த கல்வியை வழங்கி வருகிறோம். மருத்துவ படிப்புக்கு தயார் செய்து வருகின்றனர். இதற்கு +2 படிப்பு போதுமானதாக உள்ளது. நீட் தேர்வுக்காக தனியார் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கினறன. மற்ற மாநில மாணவர்களுக்காக, தமிழக மருத்துவக்கல்லூரி இடங்கள் நீட் தேர்வு என்ற அடிப்படையில் அபக ரித்து வழங்கி வருகிறார்கள். நீட் தேர்வு பிரச்சனையில் பொது மக்கள், மாணவர்களின் நிலை அறிந்து ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். சில மாநிலங்களில் மருத்துவ கல்லூரிகள் இல்லை என்பதற்காக தமிழகத்தில் உள்ள மருத்துவ கல் லூரிகளின் இடங்களை அபகரித்து வழங்குவதை விட, மருத்துவ கல்லூரி இல்லாத மாநிலங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.